வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ஔவையின் ஆத்திச்சூடியும் பாரதியின் புதிய ஆத்திச்சூடியும்

ஔவையின் ஆத்திச்சூடியும் பாரதியின் புதிய ஆத்திச்சூடியும்
முன்னுரை
          சுருங்க சொல்லி விளங்க வைத்தல் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குவது ஆத்திச்சூடி.  அவ்வையின் ஆத்திச்சூடி ஆரம்பப் பள்ளி முதல் பாடமாய் பிஞ்சு நெஞ்சங்களில் பதிந்து நல்லறத்தைப் போதிக்கும் நீதி நூலாக விளங்குவது.  பாரதியின் ஆத்திச்சூடி தற்கால இளைஞா்களுக்கு மன வலிமை அளிக்கும்  குளிகை போன்றதாகும்.  இவ்விரு நூல்களும் அமைப்பால் ஒன்றுபடினும் சில பல கருத்துக்களில் முரண்பாடாகவும் உள்ளன. ஔவை ஆத்திச்சூடி காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டாகும்.  பாரதியின் புதிய ஆத்திச்சூடியின் காலம் 20-ஆம் நூற்றாண்டாகும்  இவ்விரு நூல்களும் அமைப்பால் ஒன்று படினும் சில, பல கருத்துக்களில் முரண்பாடாகவும்  உள்ளன.  இவ்விரு பாடல்களையும் ஒப்பிட்டுக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆத்திச்சூடி - பாவகை
          ஆத்திச்சூடி ஓரடி உடையதாகும்.  ஓரடிக்குள்ளேயே பொருள் முழுமை பெற்றுவிடும்.  இத்தகைய ஓரடிக் கவிதைகள் பல கொண்டு விளங்குவது ஆத்திச்சூடி
          தொல்காப்பியர், சூத்திரத்திற்குரிய இலக்கணம் கூறும் போது ஆத்திரம் என்பது கண்ணாடிக்குள் அதன் நிழல் ஒரு பொருமலையே தோன்றுவது போல ஐயுற்று ஆராய்தல் இன்றி கூறப் பெற்றுள்ள பொருள் தெளிவாக விளங்குமாறு அமையும் யாப்பினுள் ஏதாவது ஒன்றின் வடிவமைத்து அமைப்பதாகும் என்கிறார் இதனை,  
          “ஆத்திரநி தானே
         அடி நிழலின் அறியத் தோன்றி
          நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க
         யாப்பினும்  தோன்ற யாத்து அமைப்பதுவே” (தொல்.1425 செய்யுளியல் 167)
என்னும் தொல்காப்பிய நூற்பா தெரிவிக்கிறது.  இவ்விலக்கணத்திற்கேற்ப ஆராய்வதற்கு இடமின்றித் தெளிவாகப் பொருள் விளங்குமாறு அமைந்திருப்பது ஆத்திச்சூடி ஆகும்.  பொருள் தெளிவுடையதாய் இருசீர் அமைந்த ஓரடியாய் வருவது ஆத்திச்சூடியின் இலக்கணமாகிறது.  ஔவையின் ஆத்திச்சூடியும், பாரதியின் ஆத்திச்சூடியும் இவ்வாறே அமைந்துள்ளன.
அமைப்பும் எண்ணிக்கையும்
          ஆத்திச்சூடி தமிழ் எழுத்துக்களின் அகர வரிசையில் பாடப்பட்டது ஆகும். “உயிரும் உயிர்மெய்யுமான தமிழ் எழுத்துக்கள் நிரலே முதல் எழுத்துக்களாக வைத்து எழுதப்பட்டது.  ஔவையின் ஆத்திச்சூடி உயிர் எழுத்துக்கள் வரிசையில் 12யும் ஆய்த எழுத்தில் ஒன்றும் அகரத்தைக் கொண்ட க,ங,ச,ஞ... உயிர்மெய் வரிசையில் 18யும் க,கா, கி,கீ என்னும் அகர வரிசையில்  12 யும் சகரம், தகரம், நகரம், பகரம், மகரம், வரம் ஆகிய வரிசைகள் ஒவ்வொன்றிலும் 11 யும் ஆக காப்புப் பாடல் நீங்கலாக மொத்தம் 108 பாக்கள் உள்ளன.  மொழி முதல் வரைாத எழுத்துக்களுக்கு உயிரெழுத்தைச் சேர்த்துப் பாடப்பட்ட வையாகும்.
          பாரதியின் ஆத்திச்சூடியில் உயிரெழுத்து  வரிசையிலும் ககரம், சகரம், உயிர்மெய், எழுத்துக்கள் வரிசையிலும் ஒவ்வொரு வரிசைக்கும் 12-யும், நகர வரிசையில் 5-யும்  தகர வரிசையில் 11-யும், யகர வரிசையில் 3-யும், ரகர வரிசையில் 8-யும், லகர வரிசையில் மயும், வகர வரிசையில் 8-யும் ஆக மொத்தம் 110 பாக்கள் உள்ளன.  இவற்றில் சிலவற்றில் தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக வட மொழிக் சொற்கள் வந்துள்ளன.
ஒற்றுமை வேற்றுமைகள்
          இரு, ஆத்திச்சூடிகளும் செய்யத் தகுவனவாகவும் செய்யத் தகாதவனவாகவும் பல கருத்துக்களை  கூறுகின்றது.  இரண்டு ஆத்திச்சூடியின் கருத்துக்களிலும் ஒற்றுமைகள் பல உள்ளன.  இருப்பினும் காலத்தால் முற்பட்டதாகவுள்ள அவ்வையின் ஆத்தச்சூடியிலிருந்து காலத்தால் பிற்பட்ட பாரதியின் ஆத்திச்சூடி சில கருத்துகளில் முரண்பட்டு நிற்கிறது.
ஒற்றுமைகள்
          “ஆத்திச்சூடி”  என்ற பெயர் செய்யுள் முதற்சொல்லால் வந்ததாகும்.  பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் உள்ள புதிய என்னும் அடையை நீக்கிவிட்டால் இரு ஆத்திகளும், ஆத்திச்சூடி என்ற முதற்சொல்லால் பெயரைப் பெற்றவைகளே ஆகும்.
          ‘ஆத்திச்சூடி’ செய் செய்யாதே என்னும் கட்டளை வாக்கியத்துடனே அமைவதால் இவ்விருவரின்  ஆத்திச்சூடியிலும் அதே வாக்கிய வகையே அமைந்திருப்பதும் இரு ஆத்திச்சூடிகளும் நீதி  உரைகளாக இருப்பதும்  இவ்விரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகளாகும் மேலும் ஆத்திச்சூடி என்னும் அமைப்பில் ஔவையின் ஆத்திச்சூடி, பாரதியின் ஆத்திச்சூடிக்கு அடித்தளமாக அமைவதால் அமைப்பிலும் இலக்கண முறையிலும் இரண்டும்  ஒரே தன்மையைக் கொண்டிருக்கின்றன.
          சொல்லுவது தெளிந்துசொல் என்று பாரதியின் ஆத்திச்சூடியும், ‘பிழைபடச் சொல்சேல்’ என்று ஔவையின் ஆத்திச்சூடியும் பேசும் சொற்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்கின்றன.
          இரு ஆத்திச்சூடிகளிலும் தெய்வ நம்பிக்கை உண்டு மேலும் ‘வீடுபெற நில்’ என்று ஔவையும், ‘தவத்தினை நிதம்புரி’ என்று பாரதியும் வீட்டு நெறியை வலியுறுத்துகின்றனா்.  வணத்தினைப் பெருக்கு என்று இரு ஆத்திச்சூடிகளும் கூறுகின்றன. நோய்க்கு இடங்கொடுக்கக் கூடாது தருமம் செய்ய வேண்டும்.  நியாயம் பேச வேண்டும் என்று இருவரும் உரைக்கின்றனா்.
          பல  ஒற்றுமைகள் இவ்விரு ஆத்திச்சூடிகளிலும் உள்ளன.
வேற்றுமைகள்
          இரு ஆத்திச்சூடிகளும் காலத்தால் வேறுபடுகின்றன.  ஆத்திச்சூடி காப்புச் செய்யுளுடன் 109  பாக்களையும் பாரதியின் ஆத்திச்சூடி 110 பாக்களையும் கொண்டுள்ளன. ஔவையின் ஆத்திச்சூடியில் அகரம் சோ்ந்த க, ங, ச, ந வரிசையில் பாக்கள்உள்ளன.  இதனால் க, ச, த, ந, ப, ம, வ ஆகியவற்றை முதலெழுத்தாகக் கொண்ட பாக்கள் இருமுறை வருகின்றன.  பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் அகரம் சேர்ந்த க, ங, ச, த, ந, ப, ம, வ ஆகியவற்றை முதலெழுத்தாகக் கொண்ட பாக்கள் இருமுறை வருகின்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் அகரம் சேர்ந்த க,ங, ச, ஞ....18 எழுத்துக்களைக் கொண்ட வரிசைப் பாக்கள் இல்லை.  ஆகையால் அவ்வரிசையில் வரும் எழுத்துக்களை முதலெழுத்தாகக் கொண்ட பாக்கள் இருமுறை வருவதில்லை ஒரே முறையே வருகின்றன.
          ஔவையின் ஆத்திசூடியில் ஆய்த எழுத்தைக் கொண்ட பா உயிரெழுத்தை முதலாகக் கொண்டு உள்ளது.  பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் ஆய்த எழுத்து கொ்ணட பா இல்லை ஔவையின் ஆத்திச்சூடியில் நு-வை முதலெழுத்தாகக் கொண்ட பா உள்ளது.  பாரதியின் ஆத்திச்சூடியில் ஞ.கர வரிசையில் எழுத்தில் ஞ-வை முதலெழுத்தாக கொண்ட பா ஒன்று உள்ளது.  பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் நகர வரிசையில் உள்ள எழுத்துக்களை முதலெழுத்தாக கொண்ட பாக்கள் 5 உள்ளன.  மேலும் ய,ர,ல ஆகிய  வரிசையிலும் பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் பாக்கள்  உள்ளது, ஔவையின் ஆத்திச்சூடியில் இவ்வரிசைகளில் பாக்கள் இல்லை.  இவை முதலெழுத்துக்களைக் கொண்டுள்ள விதத்திலும் பாக்களின் எண்ணிக்கையிலும் உள்ள வேறுபாடுகள் ஆகும்.
முடிவுரை
          அவ்வகையில் ஆத்திச்சூடிக்கும் பாரதியின் புதிய ஆத்திச்சூடிக்கும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்படுவதற்கு காரணம் அவை உருவான காலமே ஆகும்.  அவ்வையார் வாழந்த காலம் சமய வேற்றுமையும்  பிறா் நாட்டை  கைப்பற்றி ஆள வேண்டும் என்றும் அரசா் போக்கும் இருந்தது.  அதனால் அவ்வையின் பாக்கள் சமய நல்லிணக்கம் உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளன.  பாரதியின் காலத்தில் நாடு அடிமைப்பட்டிருந்தது.  அதனால் நாட்டு மக்கள் விடுதலை பெற வேண்டி அவரின் பாடல்களில் புரட்சிப்போக்கும் காணப்பட்டது.

-கு.கங்காதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக