வியாழன், 17 ஆகஸ்ட், 2017

சோறு கண்ட இடம் சொர்க்கம்

சோறு கண்ட இடம் சொர்க்கம்
          என்னும் பழமொழி சோறு கிடைத்தால் போதும், வேறு எதைப்பற்றிய கவலையும் இன்றி அங்கேயே தங்கி அதையே சொர்க்கமாகக் கருதி வாழமுற்பட்டு விடுவார்கள் மனிதா்கள்  என்று சாப்பாட்டையே முக்கியமாகக் கருதும் சாப்பாடு்ப் பிரியா்களுக்காகச் சொல்லப்பட்டதாக இன்று கேலிக் குறியதாக இப்பழமொழி பயன்படுத்தப்பெறுகிறது.  ஆனால் இது தீவிர இறை பக்தா்களை முன்னிறுத்திச் சொல்லப்பட்டதாகும்.  தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் ஐப்பசி மாதம் அன்னாபிடேகம் நிகழும்.  இந்நாளில் சிவலிங்கத்தைச் சோற்றால் மூடி வைத்திருப்பார் அன்று மாலையில் மேளதாளத்துடன் இறைவன் மீதுள்ள பெருஞ்சோற்றினை எடுத்துச் சென்று குளத்தில் கரைப்பா் குளத்தில் வாழும் உயிரினங்களுக்கும் அன்று உணவிடுதல் நிகழும்.  சோற்றால் மூடியுள்ள இறைவனை வழிபட்டால் சொர்க்கப்பேறு நிச்சியம் கிட்டும் என்பதைத் தான் இப்பழமொழி உணா்த்துகிறது.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக