வெள்ளி, 7 டிசம்பர், 2018

பழமொழி உண்மைப்பொருள்


பழமொழி உண்மைப்பொருள்
            புண்பட்ட மனதைப் புகை விட்டு ஆத்துதல் என்று ஒரு பழமொழி வழங்கப்பெறுகிறது.  இது ஆண்களுக்கு உரியதைப் போன்றும் மனது புண்பட்டால் சிகிரெட் குடித்து அதை ஆற்றுவது போலவும் இதற்கு பொருள் கொள்ளப் பெறுகிறது.  ஆனால் ஆண், பெண் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் துன்பம் வருவது ஆதனால் மனது புண்படுவது இயற்கை நமக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் இயல்பாக வாழ்தல் இயலாது எனவே புண்பட்ட  மனதை அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிராமல் வேறு ஒன்றின் பால்  (புக விட்டு)  செலுத்தினால் மனப்புண் ஆறும் என்பதையே புண்பட்ட மனதைப் புகவிட்டு ஆத்துதல் என்றனா்.  இதில் புகவிட்டு என்பது புகை விட்டு என்றாகி தவறான பொருள் கொள்ள வைத்துள்ளது.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை


சின்ன சின்ன ஆசை


சின்ன சின்ன ஆசை
            வீடே அதிரும்படியாக ஓயாத வரட்டு இருமல் சேகரை  வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.
            அறுபதைத் தாண்டிவிட்டால் அன்றாடம் பலருக்கு இரவும்பகலும் இணைபிரியாமல் துணையாயிருப்பது நோய்கள் மட்டும் தான்.
            “என்னவுட்டு இருமலோ இப்புடி விடாப்பிடியாய் பிடிச்சிக்கிட்டு பாடாய்ப்படுத்துதே இந்த மனுசன.. ஈரக்குலை அதிர்ற அளவுக்கு இப்படி  நாள்  முழுக்க இருமுனைா இந்தத் தொண்ட என்னத்துக்கு ஆகுறது? கடவுளே என்தான் இப்பிடி கஷ்டத்தக் கொடுக்குறியோ.  தெரியல”  சேகரின் மனைவி தேன்மொழி அம்மியில் தூதுவலையை  விழுதாய் அரைத்துக் கொண்டு புலம்பிக்கொண்டிருந்தாள்.
            மருமகள் அமுதா பாலில்  மிளகுதட்டிய போட்டுக் கொண்டிருந்தாள்.  பேத்திகள் விடாமல் இருமிக் கொண்டிருந்த தாத்தாவின் அருகில் நின்கொண்டு இமை சிமிட்டாமல் பாவமாய்ப் பார்த்துக்  கொண்டு நின்றார்கள்.
            இது எதுவும் தெரியாதது போல், ஏதையும் கவனிக்காதது போல் வழக்கம் போலவே தொலைக்காட்சியையும் கையிலிருந்த அலைபேசியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் பாலு.
            இருமலின் சத்தம் கூடக்கூட தொலைக்காட்சியின் சத்தமும் கூடிக்கொண்டு இருந்தது.  கடவுளைத் துணைக்கழைத்து வராததால் என்னவோ தேன்மொழி தன் மகனை அழைக்க எழுத்து உள்ளே சென்றாள்.
            உள்ளே போன பின்னும் ‘கேட்போமா வேண்டாமா’ என் யோசனையில் தன் மகனையே  உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள் “ஏம்பா உங்கப்பாவுக்கு இருமி இருமி தொண்டையே புன்னாப் போச்சு  ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்குக் கட்டிட்டுப்  போய்ட்டு வரலாம்லப்பா.
            ஒரு கையில் டிவிரிமோட்டும் மறுகையில் செல் போணுமாய் இருந்தவன் டிவி ரிமோட்டை எந்திவிட்யடி கத்தினான். “ஒரு நாளாவது வீட்டுல நிம்மதியா இருக்கலாம்னா முடியுதா இங்க? மழையில நனைஞ்சிருப்பாரு.. இல்ல வோ்வையோட குளிச்சிருப்பாரு.. இல்லாட்டினா புகை தூசில மூக்கை கொடுத்திருப்பாரு.. சும்மாயிருந்தா எப்படி இருமல் வரும்? எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு வினைய இழுத்துக்கிட்டு..ச்சை.. இவருக்கு இதே பொழப்பாப் போச்சு.. ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே கிடந்த என்னவாம்? அடங்காமத் திரிஞ்சா இப்படித்தான்  காட்டுக்கத்தலாய்க் கத்தினான் பாலு.
            வெளியே திண்ணையில் மக்களின் கத்தலைக் கேட்டுக் கொண்டிருந்த சேகா் பொங்கி வந்த அழுகையை இருமலோடு சோ்த்து அடக்கிக் கொண்டார்.
            தேன்மொழிக்கு இப்படி திட்டுகள் வாங்குவது புதிதில்லை.. தான் வாயைத் திறந்து எதைச் சொன்னாலும் வெடுக் வெடுக்கென்று தேள் கொடுக்காய் கொட்டித் தள்ளுகிறவனிடம் வேறெதை எதிர் பார்த்தவிடமுடியும்?   இருந்தாலும் பாழாய்ப் போன மனசு கேட்டுத் தெலைய மாட்டீங்குதே..
            எல்லாவற்றையும் கவலையோடு கவினித்துக் கொண்டிருந்தார் அமுதா.  இரண்டு வாரங்களில் பாலுவுக்குப் பிறந்தநாள் வந்தது.  இருவரும் வேலைக்குச் செல்வதால் வேலைவிட்டு  வந்து மாலை நேரத்தில் தான் ஒவ்வொராண்டும் கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள்.
            பிறந்தநாளென்று அலுவலகத்தில் மேலாளர், உடன் பணியாற்றும் பணியாளர்கள் கொடுத்த பிறந்த  நாள்  பரிசுகளைத் தூக்க முடியாமல்  தூக்கிக் கொண்டு வந்தான்  வாசலில் நின்று வரவேற்க மனைவி நிற்காததே பெரிய ஏமாற்றமாயிருந்தது.  வீட்டினுள் நுழைந்து அறைக்குள் அடுக்கிவைத்துவிட்டு சுற்று மற்றும் தேடிப்பாத்தான்.  பிள்ளைகள் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தார்கள்.. அப்பா அம்மாவைத்தான் தேடுகிறாரென்பதை உணா்ந்த பிள்ளைகள் “அப்பா.. அம்மா ஆபிஸ்ல் வேலையிருக்காம்.  இன்னிக்கு வர லேட்டாகுமாம். மகன் சொன்னதும் ஏமாற்றம் ஆத்திரமாய் மாறியது.
            அமுதா ஏழு மணிக்குத்தான் வீடு வந்தான்.  வந்ததும் உடைமாற்றி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள், மணி எட்டரையைத் தாண்டியது. அதற்குமேல் பொறுமையில்லாமல் “இன்னிக்கு   என் பிறந்தநாளுனு கூட உனக்கு ஞாபகம் இல்லாமல் போய்ருச்சில்ல..  “அமுதாவின் நேருக்கு நோ் நின்று கேட்டான்.
            “அய்யய்யோ.. ஆபிஸ்ல ரொம்ப வேலை. மன்னிச்சிடுங்க.. “என்று சொன்னவாமே அஞ்சறை டப்பாவிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டி “கேக் வாங்கிட்டு வாங்க.. வெட்டலாம் என்றாள்.  பாலுவிற்கு ஆத்திரம்  எரிமலையாய் வெடித்தது.
            “நா என்ன பிச்சைக்கரனா? உனக்கு சம்பாதிக்குற திமிர் வந்துடுச்சு.. ஆபிஸ்ல எவ்வளவு போ் சிரிச்சமுகத்தோட வாழ்த்து சொல்லி எனக்குப் பிடிச்சதெல்லாம் தெரிஞ்சிட்டு கிஃப்ட் கொடுத்தாங்க.. நி என்னபான்னா கடனுக்குப் பணத்தை நீட்டுற?  உங்காசு யாருக்கு வேனும்?” கத்தினான் பாலு.  வழக்கம் போல பொறுமையோடிருந்த அமுதா “உங்களுக்கிருக்கிற சின்னச் சின்ன ஆசைகளப் போலத்தானே மத்தவங்களுக்கும் இருக்கும்.  எண்ணிக்காவது மாமாகிட்ட ‘சாப்பிட்பீங்களாப்பா.. மாத்திரை போட்டீங்களாப்பா.. இப்போ உடம்புக்குப் பரவாயில்லையான்று கேட்டிருக்கீங்களா? மாசம் ஒன்னாம் தேனியானா பெட்டிக்கடை, பால்காரனுக்குப் பணம் கொடுத்து கடனை அடைக்குற மாதிரி பெத்தவங்களுக்கும் பணம் கொடுக்குற தோட நிறுத்திடுறீங்க.. பெட்டிக்க்கடைக்காரனும் பெத்தவங்களும் ஒன்னாங்க?  எவ்வளவு காசுக் கொடுத்தாலும் நீங்க பாசமா அனுசரணையா பேசு ஒத்த சொல்லுக்கு ஈடாகுமா?  பெரியவங்கள இருக்குறப்பவே அவங்கள நல்லாக் கவனிச்சுக்காம இல்லாதப்போ அழுது புலம்புறது முட்டாள் தனமில்லங்க.. அது அயோக்கியத்தனம்.  அப்பா அம்மாகிட்ட முகம் கொடுத்து பேசி சிரிச்சு எத்தனை வருசாமாவுதுன்னு  கொஞ்சம் நினைச்சுப் பாருங்க ஏ டி எம் மிஷினும் வாடிக்கையாளரும் மாதிரியாங்க  குடும்ப உறவு?”
            அமுதா கேட்கும் எந்தக் கேள்விக்கும் பாலுவால் பதில் சொல்ல முடியவில்லை.  ‘தப்பாச் சொல்லியிருந்தா மன்னிச்சுக்கோங்க.. உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ரவா லட்டுதான் செஞ்சிகிட்டு இருக்கேன்.  பத்து நிமிஷம் வெய்ட பண்ணுங்க.  சாப்பிடலாம்  சொல்லிவிட்டுப் போன அமுதா போன திசையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
            மனிதனுள் புயல் அடித்து ஓய்ந்து போலிருந்தது.  புதிதாயப் பிறந்தவனைப் போல உணா்ந்தான்.  வேக வேகமாய் அலைபேசியில் டயல் செய்து  பேசத்தொடங்கினாள்.  “அப்பா.. நல்லாயிருக்கீகளா? சாப்பிட்டீங்களா? மாத்திரை போட்டீங்களா?”
            உள்ளே அமுதாவின் கண்களிலும் ஊரில் சேகரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் துளிர் விட்டுக் கொண்டிருந்தது.. இன்னும் இரு கண்களும் கலங்கித் தவித்தன.. அவை பாலுவின் கண்கள்.
-முனைவா். ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

தமிழாயிரம்


தமிழாயிரம்
23. அகத்தியப் புரட்டு
1.         என்றதால் செக்கிழுக்கும் மாடாய் இழிவுற்றார்;
            நன்றென்றார் நம்பகையா் ஏற்று.
2.         ஏற்றுவந்த கொத்தடியார் ஏதும் எழுத்தறியார்
            போற்றிய போர்களைப் போல்.
3.         போல்பார்ப்பார் தம்நெறியைப் போற்றினார்.  பார்ப்பார்தாம்
            மேய்ப்பாராய் நிற்கப் புகுந்து.
4.         புகுந்தார் புனைந்தார் புனைகதைகள்; பார்ப்பார்
            மிகுந்த நிலைமை யுற
5.         நிலைபெற்ற பொய்ச்சடங்கால் நின்ற அறிவும்
            குலைவுற்றுக் கெட்டது  கூறு.
6.         கூறினார் பொய்யாய்ப் பொதியத் தகத்தியன்
            கூறினான் முத்தமிழ் என்று.
7.         என்றுமே இல்லா ஒரு நுலை நன்றாம்
            ‘மகத்துவம்’ என்றார் மதித்து.
8.         மதித்ததொல் காப்பியன் மாணூலைத் தள்ளக்
            கதித்த கதைதான் அது.
9.         அதனை உருவாக்கி ஓா் நூல் உளதாய்
            அகத்தியப்போ் சூட்டினார் ஆய்ந்து.
10.       ஆய்ந்தறிதந்தால் முத்துவீரா் நூலுக்குப் பின்வந்து
            சாய்ந்தநூல் என்னல் தெளிவு.




கலங்கைர விளக்கு (குறுங்கதை)


கலங்கைர விளக்கு (குறுங்கதை)
            இரவு நேரம்  கடலலைகள் கைவிடப்டோரை வரவேற்க தனது கரங்களை விரித்து ஓலமிட்டுக் கொண்டிருந்தது.  தூரத்தில் ஒருவன் கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றும் சுனாமிக்கு இரையான அவனது பெற்றோரை நினைவுப் படுத்தியது. சுற்றத்தாரால் கைவிடப்பட்டு தனது வாழ்க்கையில்  பிரகாசமின்றித தவிக்கின்ற இவனது பெயரோ பிரகாசம் மன அழுத்தத்தால் உந்தப்பட்டு எழுந்து நடக்க ஆரம்பித்த பிரகாசத்தின் மீது பளிச்சென்ற  ஒளி பிரகாசமாக அவனது முகத்தில் பட்டது திடுக்கிட்ட அவன் வெளிச்சத்தை நோக்கி நடந்தான்.  அவனுக்குத் தெரியாது கலங்கரை விளக்கு  அவனது வாழ்வில் திருப்பு  முனையை ஏற்படுத்து மென்று வெளிச்சம் தோன்றிய இடத்தின அருகில் சென்ற போது அவனை பிரமிக்க வைத்தது ஒரு நிகழ்ச்சி தனது வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்ற எய்ட்ஸ் நோயாளியும் மாற்றுத் திறனாளி ஒருவனும் மீன் வலைகளைப் பின்னிக் கொண்டிருப்பதைக் கண்டான். இச்சம்பவமானது  அவனது முடிவை மாற்றக் காரணமாயிருந்தது.  ஆம் அவ்விருவரின் முயற்சியும் செயலும் பிரகாசத்தின் உள்ளத்தை  பிரகாசிக்கச் செய்து உணர வைத்தது.  மறு வாழ்க்கை உண்டென்றது.  பிரகாசத்தின் வாழக்கையானது எய்ட்ஸ் நோயாளியின் வாழ்க்கைக்கும் மாற்றுத் திறனாளியின் வாழ்க்கைக்கும் சமா்ப்பணமாக மாறி ஒளி வீசத் தொடங்கியது.  ஒளி வீசி வழிகாட்டும் கலங்கரை விளக்காக!
வே.ஜெயமாலா






கார்த்திகை மாத சிறப்பு


கார்த்திகை மாத சிறப்பு
            கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான்.  ஐப்பசி கார்த்திகை அடைமழை என்பது பழமொழி.  கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழை பொழியும் கார்காலம் ஆகும்.  காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம் ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.
            கார்த்திகை  மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கச் சீராக இருக்கும் .  எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தா்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அனிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
            இம்மாதத்தில்  திருமணங்கள் அதிகம் நடத்தப்பெறுவதாய் இது திருமண மாதம் என்று சிறப்பிக்கப்படுகிறது.  திருமால் துளசியை இம்மாத வளா்பிறை துவாதசியில் திருமணம் செய்து கொண்டார்.  எனவே இம்மாதம் முழுவதும் துளசித்தளங்களால் அா்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசித் தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.
            கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமாவார விரதம், உமாமகேசுவர விரதம், கார்த்திகை விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளா்பிறை துவாதசி, ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மு.சிவசுப்பிரமணியன்




கஜா பாதிப்புப் பகுதிகளைத் தேசியப் பேரிடா் பகுதியாக அறிவிக்க வேண்டும்


கஜா பாதிப்புப் பகுதிகளைத் தேசியப் பேரிடா் பகுதியாக அறிவிக்க வேண்டும்

         தி.பி.2049.             ஐப்பசித் திங்கள்
                                                  தேன்-2.                        துளி-22




                    கஜா புயலின் காரணமாக கடந்த  முப்பதாண்டுகளில் சந்திரத்திராத பேரழிவை தஞ்சை, நாகை, திருவாரூா், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா பகுதி மக்கள் சந்தித்தனா்.
          ஏறத்தாழ 12 மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கத்தினால் 63 போ் பலியாகியுள்ளதாகவும், இலட்சக்கணக்கான தென்னை மரங்கள், விலங்குகள் ழெிந்ததாகவும்,   2 ½ இலட்சம்  பேர் வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கஜா புயல் பாதித்த பல பகுதிகளில் சீருமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடையாமல் ஒரு மாத காலத்தை எட்டும் நிலையிலும் பல கிராமங்கிளில் உணவு, குடிநீர், மின்சாரம் வசதி கிடைக்கப் பெறாமலும், நோய்த்தொற்று பரவும் ஆபத்திலும் மக்கள் சிக்கித் தவிக்கின்றனா்.
          தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழிப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டிருப்பது பல்வேறு அரசியல் கட்சிகளிடத்திலும், பொது மக்களிடத்திலும் பெரும் வரவேற்பையும், பாராட்டையம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இருப்பினும்  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் பெருந்துயரைத் துடைக்க வேண்டிய  அரசு நிர்வாகத்தோடு பல்வேறு அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகளுக்கும் தன்னா்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் மட்டுமல்லாது ஒவ்வொரு தமிழருக்கும உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
          மரங்களோடு மரங்களாக அடியோடு பெயா்த்தெறியப்பட்டு உதவி வேண்டி கதறுகிற மக்களின் வாழ்வியலையும் செப்பனிட அரசோடு மக்களும் கைகோர்த்து களத்தில் இறங்க வேண்டும்.  அத்துடன் தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தேசிய பேரிடா் பகுதிகளாக அறிவிக்க மைய அரசிற்கு கோரிக்கை விடுத்து நிவாரண உதவிகளை மக்கள் முழுமையாகப் பெற்றிட தொடா் நடவடிக்கைகளை  மேற்கொள்ள தேமதுரம் கோரிக்கை விடுக்கின்றது.
தோழமையுடன்,
தேமதுரம் - ஆசிரியா் குழு

வீறுகவியரசா்க்குப் புகழணி சோ்த்த மற்றுமொரு மணிமகுடம்


வீறுகவியரசா்க்குப் புகழணி சோ்த்த மற்றுமொரு மணிமகுடம்

         தி.பி.2049.             புரட்டாசித் திங்கள்
                                                 தேன்-2.                        துளி-21



            07.10.2018 அன்று  காரைக்குடி கோல்டன் சிங்கார் மகாலில் நடைபெற்ற வீறுகவியரசா் முடியரசனார் வெள்ளணி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வீறுகவியரசா் முடியரசனார் நோ்மைப் போராளி விருது பெற்ற மதிப்புற உ.சகாயம் இ.ஆ.ப. அவா்கள் விழாத் தொடக்கதிலிருந்து முடிவும் வரை நிகழ்வில் பங்கேற்று எழுச்சியுரையாற்றியது கூடியிந்த பள்ளி- கல்லூரி, மாணவா்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த இளைஞா்கள் மத்தியில் புத்தாற்றலை ஊட்டியிருக்கிறதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.
            “இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்னும் கொள்கையிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் நான் சமரசம் செய்து கொள்ளாததோ, இந்தியாவிலேயே முதன் முதலில் சொத்துக் கணக்கை வெளியிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பாலோ எனக்குப் பெருமையாக நான் கருதவில்லை.  உலகின் மூத்த குடியாய் அறத்திலும் மறத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கிய தமிழ்க்குடியில் நான் பிறந்திருப்பதையே நான் பெருமையாகக் கருதுகிறேன். இப்படி என்னுள்ளத்தில் தமிழுணா்வும், தமிழுணா்வும், தமிழனென்ற பெருமிதமும் பொங்கிடக் காரணமாய் அமைந்தவா் வீறுகவியரசா் முடியரசனார் அவா்கள் தான் அவருடைய கவிதைகளும் பாவேந்தா் பாரதிதாசனுடைய கவதைகளும் தான் என் உள்ளத்தில்  தமிழ்ப்பற்றைப் பொங்கி எழச் செய்தன” என்று உரையாற்றியது இளையோர் பலரின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல ஆழப்பதிந்துவிட்டது.
            அதற்கு பல சான்றுகளில் இரண்டைமட்டும் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.  தூய வளனார் கல்லூரியில் பயின்று கொண்டே திருச்சி வானொலி நிலையத்தில்  பகுதிநேர அறிவிப்பாளராகப் ஒலிபரப்பாகும் ‘வென்றவா் பாதை’ நிகழ்ச்சியில் தன்னெழுச்சியாக வீறுகவியரசா் முடியரசனார் குறித்து ஒலிச்சித்திரம் ஒன்றை உருவாக்கி ஒலிபரப்பியுள்ளார்.  அதேபோன்று காரைக்குடி அழகப்பா கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் முதலாமாண்டு பயின்று வரும் மாணவா் இரா.மணிகண்டன் 130 நாடுகளில் ஒளிபரப்பாகும் ராஜ்தொலைக்காட்சிகளில் வீறுகவியரசரின் புகழ் பரப்ப அடித்தளம் அமைத்து வீறுகவியரசா்க்கு அணிமகுடம் சூட்டிய ‘நோ்மைப் போராளி’ உ.சகாயம் இ.ஆ.ப. அவா்களின் பேச்சு.  இது முடியரசனார்க்குப் புகழணி சோ்க்கும் மற்றுமொரு மணிமகுடம் என்பதில் எள்ளளுவம் ஐயமில்லை.
           
                                                                                                                         தோழமையுடன்
தேமதுரம் - ஆசிரியா்குழு