சனி, 24 மார்ச், 2018

நீரின்றி அமையாது உலகு




தலையங்கம்

தி.பி. 2049 (கி.பி. 2018)       மாசித்திங்கள்
தேன் - 2                                                துளி -15

நீரின்றி அமையாது உலகு
(உலக தண்ணீர் தினம் - மார்ச் - 22)



            இன்று வளா்ந்து வரும் வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றிருக்கிறது.  விண்ணைத் தாண்டும்  ஏவுகணைகள், வியக்கத்தக்க அறிவியல்  கண்டிபிடிப்புகள் என இந்தியாவின் வளா்ச்சி உலக நாடுகளில் கவனத்தை ஈா்த்துள்ளது.  எல்லாம் சரிதான்.  ஆனால்... மக்கள் வாழ்வதற்கான தகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக நம் நாடு இழந்து வருகிறது என்பதுதான் வேதனையான  உண்மை.  குறிப்பாகத் தண்ணீா் பிரச்சனை நம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது.  பெரு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை போதிய நீா் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனா்.  சில கிராமங்களில் தண்ணீா்  தேடி பெண்கள் பல காத தூரம் அலைந்து திரியும் அவலநிலை நிலவுகிறது  கோடையில் இந்நிலைமை மிக மோசமாக  உள்ளது. நீரின்றிப் பறவைகள் இறக்கின்றன.  விலங்குகள் தண்ணீர் தேடி காட்டை விட்டு ஊருக்குள் வருகின்றன.  இந்நிலைக்குக் காரணம் என்ன?
            காலநிலை மாற்றம் முக்கியக் காரணம்.  ஒரு வருடம் மழையே  இல்லாமல் பொய்த்துப் போகிறது.  மறுவருடம் பெரும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் அளவிற்குக் கொட்டித் தீா்க்கிறது.
            இக்காலநிலை மாற்றத்தைப் புரிந்து கொண்டு மழை வரும் காலங்களில் நீரைச் சேமிக்க இன்றைய ஆடசியாளா்களும், அதிகாரிகளும் போதிய அக்கறை காட்டுவதில்லை.  இருக்கும் நீா் நிலைகளைப் பராமரிக்கவும், புதிதாக நீா்நிலைகளை உருவாக்கவும்  எந்த வித முயற்சிகளும் முறையாக மேற்கொள்ளப் படுவதில்லை.  அதனால் தான் பெருமழை பெய்த அடுத்த மாதத்திலேயே மீண்டும் தண்ணீா்ப் பஞ்சம் ஏற்படுகிறது.  நிலைமை இவ்வாறிருக்க, மக்களோ ஆழித்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீரை எடுது்து தேவைக் கதிகமாக நிரைச் செலவு செய்கின்றனா்.  இதனால்  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டு போகிறது.  இப்படியே போகுமானால் நம் வருங்காலச் சந்ததியினா் நீரில்லாமல் அழியும் நிலை உருவாகிவிடும்.  இதைத் தவிர்க்க மக்களும் கொஞ்சம் மாற வேண்டும்.  தேவைக் கேற்ப நீரைச்  சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன் நிலத்தடி நீர் மட்டத்தைப் பாழாக்கும் காரணியான நெகிழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.  தங்களால் இயன்ற அளவு மரங்களை நட்டு வளா்க்க வேண்டும்.  வீடுகளில் மழைநீா் சேகரிப்பை நிச்சயப்படுத்த வேண்டும்.
            மேலும், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களோடு சண்டையிடும் அவல நிலையும் காலம் காலமாகத் தொடா்ந்து கொண்டே இருக்கிறது.  நதிகள் பொதுவுடைமையாக்கப்பட்டால் ஒழிய இந்நிலை தொடா்ந்து கொண்டே தான் இருக்கும் எனவே நதிநீா் இணைப்பிற்காக மக்கள் ஒரு மித்த குரல் எழுப்ப வேண்டும்.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் நாள் உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படுவதோடு விட்டு விடாமல் தண்ணீர்ப் பெருக்கத்திற்காக வழி வகைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.  நீா் ஆதாரங்களைப் பெருக்கி பெருங்காலச் சந்ததியினா் வளமுடன் வாழ இந்த உலக தண்ணீா் தினத்தில் உறுதியேற்போம்.
தோழமையுடன்
தேமதுர ஆசிரியா் குழு
ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர் 
தே.தீபா

துணையாசிரியர்
பெ.குபேந்திரன் 

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
ந.முத்துமணி
மு.சிவசுப்பிரமணியன்
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.




கொள்ளு - பருப்பு பொடி


கொள்ளு - பருப்பு பொடி
தேவையான பொருட்கள்
1. துவரம் பருப்பு - 4 கப்
2. கொள்ளு - 1/2 கப்
3. மிளகு - 20
4. மிளகாய் வற்றல் - 10
5. பெருங்காயம் - 1 சிட்டிகை
6. உப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை
o   வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
o   துவரம் பருப்பு மிளகு, மிளகாய் வற்றல் பெருங்காயம் ஆகியவறறை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.
o   வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துச் கொள்ளவும்.
o   வறுத்த அனைத்தையும் மிக்சியில் போட்டு  பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
o                பயன்கள்
o                       புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும்.  கொள்ளு ஆங்கிலத்தில் ‘ஹார்ஸ் கிராம்’ என்று அழைக்கப்படுகிறது. நம் இரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க உதவுகிறது.  அதுமட்டுமல்லாது சிறு நீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.  ஜலதோஷம், இருமல், உடல்வலி, சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும்.  கடுமையான உழைப்பவா்களுக்கு கொள்ளு உடல் சேர்வை நீக்கும்.
-க.கலைச்செல்வி









வள்ளல் அழகப்பா்


வள்ளல் அழகப்பா்
காரைக்குடியில் ஒருத்தராம் - நமக்கு
கோடி கொடுத்த கொடைஞன்
கோடியில ஒருத்தராம் - நம்ம
கோட்டையூரில் பிறந்த அரசன்
களஞ்சியம் தேடி கப்பலில்
கடல் கடந்த அழகப்பா்
கடல் கடந்து பெற்ற செல்வமழை
கல்விக்குத் தந்து உயா்ந்தார்
வீடில்லா ஏழைகளுகு்கு
வாழ்வு தந்த வள்ளல் அவா்
அழகப்பா பெருமை போற்றிடுவோம்
அவா்வழி நடந்து வாழ்ந்திடுவோம்
-மு.சிவசுப்பிரமணியன்


வெள்ளி, 23 மார்ச், 2018

தமிழாயிரம்


தமிழாயிரம்
1.  கணித்தான் மொழிக்கடன் காத்தான் தமிழால்
     பிணைத்தான் நிலஎல்லைப் பேறு.
2.  பேறெல்லாம் வாய்த்திருத்தும் பேணாமல் விட்டதனால்
     கூறெல்லைக் கூறு முறை.
3.  முறையை விலக்கும் குறிக்கோள் இலாமல்
    நிறைய இழந்தோம் இழப்பு.
4. இழந்ததை மீட்குட் திறமோ இருப்ப
   திழவாமல் காத்தலோ இல்.
5. இல்லா ஒருமை இழப்புதற் கல்லாமல்
  காக்க உதவுமோ காண்.
6. கண்டாலும் காணாமல் போகும் கயமையை
   விண்டாலும் ஆகா விடிவு.
7. விடிநாள் வருமென்ன வீழ்வின்றிக் காத்ததால்
   முடியாமல் போகாது முன்.
8. முன்னிற்கும் நோ்பகை மூண்டெரிக்கும் ஆரியம்
  பின்னிற்கும் ஆங்கிலமும் ஆம்.
9. ஆமாம் திருவிடமோ தீருா விடமாகும்.
    போமா றறிந்து புதை.
10. புதைக்குள் விழுந்தோம் புதைமூடி மேலே
    உதைத்தெழுந் தோங்குவோம் ஓா்ந்து.

  



நட்பு!


நட்பு!
அன்பெனும் கவசக் குழுமத்தில் பிறந்து
நன்பெனும் பாசப் பிணைப்பைப் பெற
நட்புக் குழுமத்தில்  இணையும் மனம்
கட்டுப்பாடு ஜனத்தில் லிருந்து பிரிந்து
பாசப் பிணைப்பில் இணைந்து வாழும்
பட்டாம்பூச்சிப் பறைவைகள் நாம்!
-தே.தீபா



திங்கள், 5 மார்ச், 2018

பேனா முனை ‘வலி’யது..


தலையங்கம்
தி.பி. 2049 (கி.பி. 2018)       மாசித்திங்கள்

தேன் - 2                                                                                                                   துளி-14


பேனா முனை ‘வலி’யது..


          அன்பும், அறனும், சமூக அக்கறையும், சமத்துவப் போக்கும் பொங்கி வழிந்த ஊடகங்களின் வாய்களில் அண்மைக்காலங்களில் நாற்றமெடுத்த சாக்கடையும், பணத்தாசையில் ஒழுகும் எச்சிலும், சாமானியா்களை உறிஞ்சிக் குடித்த குருதியும் ஒழுகி ஓடி, ஏழை எளியோரின் நடுத்தரமக்களின் குடிசைகளை குடும்பங்களைச்   சுழற்றியடித்து சூறையாடுகின்றன.
     அறியாமை இருள் நீக்கி அறிவூட்டி மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பைத் துறந்து, மறந்து அதிகாரவா்க்கத்தின் எடுபிடிகளாய் மாறிப் போயின ஊடக எழுத்துகள். “வாள்முனையை விட பேனா முனை வலியது“ என்பது வார்த்தையளவில் சரியாயிருக்கிறது..  பொருளளவில்தான் மாறிப்போய்விட்டது.பேனாவின்பிடி வலியவா்களின் கைகளில் இருக்க முனைமுகம் வறியவா்களைக் குத்திக்கிழித்து கூறுகளாக்கி வலியுண்டாக்கும் கூரியமுனை யாகத்தானிருக்கிறது. வன்முறையைத் தூண்டிவிடும் வல்லூறுகளின் வாய்ச்சவடால்களுக்கு கொடுக்கும் மதிப்பையும், கவனத்தையும் வாழ வழியிழந்து வலியோடு தவிக்கின்ற வலிமையற்றவர்களின் குரலுக்கு  கொடுப்பதுமில்லை.. செவிமடுப்பதுமில்லை..
          சட்டமன்றம், நீதிமன்றம், அரசாங்கம், பத்திரிகை ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்பார்கள்.  ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க வேண்டிய, மக்களை வழிநடத்த வேண்டிய  பொறுப்பும், வாய்ப்பும் பிறவற்றை விட ஊடகங்களுக்குச் சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது.  முதல் மூன்று தூண்கள் மக்களைக் கைவிட்டுவிட்டாலும் நான்காவதான ஊடகத்தூண் முட்டுக்கொடுத்தாலே போதும் ஜனநாயகம் பிழைக்கும். ஆனால் ஊடகத்தூண் துருப்பிடித்து, சீழ்பிடித்து பலவீனமாக இருந்தால் ஜனங்களும், ஜனநாயகமும் எப்படிப் பிழைக்கும்?
          சிந்திக்கத் தெரிந்தவா்களையும் சிந்திக்கவே விடாமல் முட்டாள்களாவும், அடிமைகளாகவும், ஓட்டுப்போடும் எந்திரங்களாகவும், சினிமாவில் சிக்கிய எந்திரன்களாகவும் மக்களெல்லோரையும் மாற்றுகின்ற மாயவித்தையைத் துல்லியமாய்த தெரிந்துவைத்திருக்கின்றன ஊடகங்கள்.
          தமிழ்நாட்டு மக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தலையாய பிரச்சனைகளைத் தெரியவைக்க, சந்தேகங்களைத் தெளியவைக்க இன்றைய சூழலில் பல ஊடகங்கள் தயாராயில்லை.  அரசியலும், சினிமாவுமே இரு கண்களென்று மக்களைக் குருடா்களாக்கி, செவிடா்களாக்கி, ஊமையராக்கும் இலக்கை நோக்கிச் செல்லும் ஊடகங்களிடம் நாம் ஊடகதா்மத்தை எதிர்பார்ப்பது, கொட்டும் தேளிடம் சொட்டும்  தேனை எதிர்பார்க்கும் மூடத்தனம்தானே..
          Flash news, Breaking News என்று குப்பைகளையெல்லாம் வீட்டு மூலைகளிலும், மனித மூளைகளிலும் நிரப்பி எப்பொழுதுமே தமிழ்நாட்டை அவசரசிகிச்சைப் பிரிவைப் போல பதற்றத்திலேயே இருக்க வைத்து, அதர்மங்களை மறக்கடித்து அவசியத்தை மழுங்கடித்து விடுவதைக் காணும் போது “விதியே என்செய்வாய்  என் தமிழ்ச்சாதியை“ என்னும் பாரதியின் புலம்பல்தான் செவிகளைக் கிழிக்கிறது.
          ஈழத்தில் யுத்தக் காட்சிகள் அரங்கேறிய போது, இங்கு முத்தக்காட்சிகளை ஒளிபரப்பியவைதானே நம் ஊடகங்கள்.. 
சிரியாவின் இனப்படுகொலையைத் தின்று செரித்து, 24 மணி நேரமும் ஸ்ரீ தேவியின் மரணச் செய்தியை ஒளிபரப்பித் திணறடித்த தியாகிகள்தானே இவா்கள்..
 முல்லை பெரியாறு பிரச்சனையைப் புறம்தள்ளி ஜிமிக்கி கம்மலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவா்களை நினைத்து தலையிலடித்துக் கொள்வதைத்தவிர வேறென்ன செய்ய முடிகின்றது?
 ‘மாணவனிடம் குத்து வாங்கிிய தலைமையாசிரியா்’ என்று கொக்கரிக்கும் பத்திரிகைகள் தானே அதிகம் விற்பனையாகிறது இங்கு..
  வாழ்வாதாரத்திற்காகப் போராடும் விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள், சிறுகுறு தொழில் முனைவோரின் கண்ணீரை, வியா்வையை, குருதியை முன்னிறுத்தாமல் சாதி, அரசியல், வணிக ஆதாயத்தைக் தூக்கிக் கொடிப்பிடிக்கும் பத்திரிகைகளை அன்றே நினைத்துத்தான் “நாட்டைப் பிடித்த நோய்களில் பத்திரிகையும் ஒன்று" என்றார் பகுத்தறிவுப் பகலவன் பெரியார்.
 "போலிப் பத்திரிகையாளரின் எழுதுகோல் பண்பாட்டுப் பயிர்களை கழுத்தறுக்கும்  கருக்கரிவாள்“ என்றார் வீறுகவியரசா் முடியரசன்.
          இந்த மாசித் திங்களிலிருந்தாவது மாசில்லா உலகத்தைக் கட்டமைக்க வேண்டிய பொறுப்பை உணரவேண்டும் ஊடகங்கள்.
 இனியேனும் குழிதோண்டிப் புதைத்துவிட்ட ஊடகதா்மத்தையும், மனசாட்சியையும் தோண்டி எடுத்து வாழ்வு கொடுத்த மக்களுக்கு உண்மை, நோ்மையோடு நடந்து கொள்ளட்டும். தங்கள் பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள பணம், பதவி, புகழ் போன்றவற்றால் வயிற்றை நிரப்பிக்கொண்ட ஊடக வயிறுகள் அறவழியில் நன்‘மை’யை நிரப்பிக் கொள்ளட்டும்..
 இளைஞா்கள் இனி பாரதியும், பெரியாரும், முடியரசனும் வந்து தான் நம் மொழியையும் இனத்தையும் மீட்கவேண்டுமென்று காத்திருக்க மாட்டார்கள்..
  ஊடகங்களே! உறக்கத்திலிருக்கும் இளையவா்களின் பார்வைபடுவதற்குள் பாதைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்.. இல்லையேல் திருத்தப்படுவீா்கள்... பிறகு அதிகமாகவே வருத்தப்படுவீா்கள்.
          அரசிய(லி)ல் பிழைத்தோர்ககு அறம் கூற்றாகும் - நினைவில் நிறுத்துங்கள்.
                                                                                      தோழமையுடன்,
                                                                                  தேமதுரம் ஆசிரியா்குழு.


ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர் 
தே.தீபா

துணையாசிரியர்
பெ.குபேந்திரன் 

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
ந.முத்துமணி
மு.சிவசுப்பிரமணியன்
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.