செவ்வாய், 30 அக்டோபர், 2018

நவராத்திரி - புராணக்கதை


நவராத்திரி - புராணக்கதை
         


          ஒரு காலத்தில் மகிடாசுரன் என்ற ஓா் அரக்கன் பராசக்தியின் அருளால் சத்துருவின் பலத்தை அருந்தும் வலிமையையும், பல சாம்ராஜ்யங்களை அடக்கியாளும் சக்தியையும் பெற்ற, நல்லோர்கள் பலருக்கு நலிவுகள் பல செய்து வந்தான்.  அதனைப் பொறுக்க முடியாத தேவா்கள், நாரத முனிவா் உபதேசத்தால் பார்வதி தேவியை  நோக்கித் தவமாற்றினா்.  இவா்களின் பாதுகாப்பின் பொருட்டுச்  சக்தியின் அருளால் ஒரு மாயக் கோட்டை தோன்றியது.  அதனுள்ளே எவரும் புக முடியாது.  அசுரன் இதை அறிந்து தேவா்களைக் கொல்லக் கோட்டை வாயிலைக் குறுக்கினான்.  கோட்டையை உடைக்கவோ, கோட்டையின் உள்புகவோ முடியாது போய்விட்டான்.  தேவா்கள் இக்கோட்டையை அரக்கனே அமைத்தனன் என நினைத்து வருந்தினா்.  பின் தேவியை நோக்கித் தவம்புரிய, தவச்சாலையில் உள்ள யாக குண்டத்தில் தேவி லலிதையெனும்  பரமேசுவரியாகத் தோன்றித் தேவா்களது இடுக்கண்களை அகற்றுவதாகக் கூறி அருள் புரிந்தாள்.  அந்த லலிதையை காமேசு வரராகிய பரமேசுவரன் திருமணம் செய்து கொண்டார்.  அவருடைய அனுமதியோடு அவள் அஸ்தீரம் முதலியன பெற்றுப் பேருக்குப் புறப்பட்டாள்.  அகரனது தம்பியா் விசுக்ரன், விடங்கன் என்பவா்கள் வந்து  எதிர்த்தனா்.  துவ தன்னிடத்தில் தோன்றிய  துா்க்கையை அனுப்ப அவள் அவா்களிருவரையும் விழுங்கினாள்.  அதன் பின் லலிதாதேவி எதிர்த்த மகிடாசுரனை சம்சரித்துத் தேவா்களது இடுக்கண்களை அகற்றினாள்.  இந்நிகழ்ச்சி நவராத்திரி ஆடுமென பாகவதம் கூறுகிறது.
          இவ்விழா நாட்களில் கோயில்களிலும் பெண்கள் தங்களின் இல்லங்களிலும் கொலு வைத்து சக்தியை வழிபடுகின்றனா்.  இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று அசுரனை அழித்தாள்.  மகிசாசுரனை அழித்ததால் சக்தி “மகிசாசுரமா்த்தினி” என்று  அழைக்கப்படுகிறாள்.  மகிசாசுரனுடன் ஒன்பது நாள்  போரிட்டு பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
          “பாண்டவா்கள் வனவாசம் செய்கையில் வன்னி மரப் பெந்தில் தங்களின் ஆயுதங்களை ஒளித்து வைத்து விட்டு விராட நகரத்தில் அஞ்ஙாத வாசம் செய்தனா்.  விராடன் மகன் உத்திரனை முன்னிறுத்திக் கொண்டு வன்னிமரப் பொந்திலுள்ள காண்டீபத்தை எடுத்து கௌரவப்படையை வென்றான் விஜயன்.  விஜயன் வெற்றிகொண்ட நாளான தசமி விஜயதசமி ஆயிற்று.  விஜயன் மகாநவமியன்று ஆயுதங்களுக்கு பூசை செய்து வந்ததால் ஆயுதப்பூசை என்ற பெயரும் ஏற்பட்டது.
வன்னிமரத்தில் அம்பு போடுதல்
          நவராத்திரியின் பத்தாம் நாள் விசயதசமி அன்று சிவன் கோயில்களில் “பாரிவேட்டை உற்சவம்” என்ற ஒன்று நடைபெறுகிறது.  அன்று இறைவன் எழுந்தருளி வன்னிமரத்தில் அம்பு போடுவது வழக்கம்.  “இதன் உட்கருத்து நெருப்பு அடங்கிய வன்னிமரம் ஆத்மாவுடன் கூடிய மனித உடலாகவும், அம்பு ஞானமாகவும், வேட்டையில்  அம்பு விடுவதை ஞான உபதேசமாகவும் கொள்ள வேண்டும் என்பதாகும். பாண்டவா்கள் வன்னி மரத்தில் தங்கள் ஆயுதங்களை வைத்து விட்டு அஞ்ஞாத வாசம் செய்தனா் பின்பு  அஞ்ஙாத வாசம் முடிந்து கௌரவா்களோடு போரிட்டு வெற்றி பெற்ற நாள் விஜயதசமி ஆகும்.  அதனை நினைவு படுத்தும் விதமாகவம் வன்னிமரத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடக்கிறது.
கொலு
          “கொலு வைப்பது என்பது அத்வைத தத்துவத்துடன் தொடா்புடையது எனலாம்.  “ஒரே ஆத்மா, சரீரங்கள் வெவ்வேறு” என்றுரைப்பது அத்வைதம் என்கிறார்.  இராமலெட்சமணன் பல படிகளில் பலவிதமான பொம்மைகளை அடுக்கிறோம்.  அவையெல்லாம் ஒரே மூலபொருளான களிமண்ணால் ஆனவை.  அனைத்திலும் ஒரே ஆத்மாவான அன்னை பராசக்தி குடியிருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
          எத்தனைப் படிகள் கொலுவில் வைத்தாலும் கீழ்படியில் ஓரிறிவு ஜீவராசி முதல் படிப்படியாக ஆரறிவு மனிதா் வரை வைத்து அதற்கு மேல் பற்றற்ற முனிவா்கள் மகான்கள் போன்றவரும் அதற்கு மேல் தேவா்கள் போன்றவா்களை வைத்து இறுதியாக மேல் படியாக இறைவனை வைக்கிறோம்.  இது ஓரிறிவு பெற்ற உயிர்கள் முதல் அனைவரும் படிப்படியாக உயா்ந்து இறுதிநிலையில் இறைவனை அடைவதை உணா்த்துவதாக அமைகிறது. கொலுவானது கோயில்களிலும் , வீடுகளிலும் வைக்கப்படுகிறது.
இச்சா சக்தி வழிபாடு
          ‘மங்கலி வடிவமானவள், கருனையானவள்’ என்று குறிப்பிடப்படும்  துா்க்கை வடிவம், நமது இதயததிலுள்ள ஆணவம் பேராசை போன்ற தன்மைகளை அகற்றி நமது உடல்  உறுதியுடனும் வலிமையுடனும் விளங்கச் செய்கிறது.  அதனால் துா்க்கை வடிவம் இச்சாசக்தி எனப்படுகிறது.  வைணவி, விஜயை, முகுந்தை, சண்டிகை, மாதவி,  கண்ணகி, காளி, மாயை, ஈசானி, சாரதை, அம்பிகை முதலிய பல பெயா்களைக் கொண்ட துா்க்கையை, “நீயே வைணவி, சக்தியும் வீரியமும் நீயே” என்று போற்றுகின்றனா்.  துா்க்கையைப் போற்றும் விதமாக ஆயுதங்களை வைத்து நவராத்திரியின் கடைசி நாளில் வழிபடப்படுகிறது.
கிரியாசக்தி வழிபாடு
          மகாலெட்சுமியின் வடிவம் கிரியாசக்தி ஆகும்.  இந்தத் திருமகளே ஆதிலெட்சுமி, கஜலெட்சுமி, தனலெட்சுமி,  தான்யலெட்சுமி, வீரலெட்சமி, விஜயலெட்சுமி, சந்தான லெட்சுமி, சௌபாக்கிய லெட்சுமி என்று அஷ்ட லெட்சுமிகளாகவும் காட்சி தருகிறாள்.
ஞானசக்தி வழிபாடு
          கலைமகளாகிய சரசுவதி ஞானசக்தி ஒன்று அழைக்கப்படுகிறாள்.  நவராத்திரி நாட்களில் ஒன்பதாம் நாள் இரவு சரசுவதிக்கென்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  இது “சரசுவதி பூசை” என்று  அழைக்கப்படுகிறது.  சரசுவதியின் வடிவம் நமது அறியமையை அகற்றி அறிவையும் குணத்தையும் வளா்க்கிறது.
விழாவின் தத்துவம்
          நவராத்திரி விழா திருக்கோயில்களில் விஜயதசமியுடன் பத்துநாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது பத்து நாட்கள் நிகழும் திருவிழாவின் தத்துவம் குறித்து மகோத்சவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
          “முதல் நாள் விழா தூல் உடம்பை நீக்கு வதற்காகவும், இரண்டாம் நாள் விழா தத்துவயமான உடம்பை நீக்கும் பொருட்டும், மூன்றாம் நாள் விழா மூவினை, முக்குணம், மும்மனம், முக்குற்றம், முற்பிறப்பு, முப்பற்று முதலிய நீக்குவதற்கும், நான்காம் நாள் விழா நாற்கிரணம், நால்வகைத் தோற்றம் நீங்கவும், ஐந்தாம் நாள் விழா ஐம்பொறிகள், ஐந்தவத்தை ஐந்து மலங்கள் நீங்கவும், ஆறாம்நாள் உற்சவம் உட்பகையாறும், கலையாதியாறும், கன்ம மல குணமாறும், பதமுக்கி ஆறும் நீங்கவும், ஏழாம் நாள் விழா ஏழ்வகைப்பிறப்பும், ஏழு வகைத் தத்துவங்களுமாகிய மலகுணமேழும் நீங்கற் பொருட்டும், எட்டாம் நாள் உற்சவம் எண் குணங்கள் விளங்கவும், ஒன்பதாம் நாள் உற்சவம் மூவடிவம் முக்கிருத்தியம், மூவித்துறைதலிலை என்ற பொருட்டும், பத்தாம் நாள் விழா சிநதையும  மொழியும் செல்லா நிலைத்தாய், அந்தயிலன்பத்தமிலில் வீடான பரமானந்தக் கடலில் அழுந்தற் பொருட்டும் செய்யப்படுவன”
          மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள சிவன் கோயில்களில் நடக்கும் நவராத்திரி விழாவின் ஒன்பது நாள் அலங்காரமும் திருவிளையாடல் புராண அமைப்பை நினைவூட்டுமாறு செய்வது குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.
ந.முத்துமணி

தமிழாயிரம்


தமிழாயிரம்
எல்லாம் அழிவு

1.       தொலைந்தது பண்பாடு;  தொல்லோர்தா மாகத்
          தொலைத்தார்நம் ஊர்ப்போ் ஒழித்து.
2.       ஒழித்தார் திருக்கோயில் தெய்வப்போ் உண்மை
          அழித்தார் வரலாறங் கங்கு.
3.       அங்கங்கு மாற்றினார் ஆறுமலை எல்லாமும்,
          தங்கள தென்னத் தடித்து
4.       தடியெடாத் தண்டலா் தரமாய் முடித்தார்
          முடிவிலா வங்சம் முனைந்து.
5.       முனைப்பால் கலைகள் முகநூல் பெயா்த்தார்
          அனைத்தும் அழித்தார் அவை.
6.       அவற்றைப் பெயா்த்தாம் நூல்களை நம்மோர்
          உவந்தார் உச்சிமேல் கொண்டு.
7.       கொண்ட இசைக்கும் குறிப்புயா்ந்த கூத்துக்கும்,
          பண்டைத்தும் நூலாய்ப் பதித்து.
8.       பதித்தார்; பரப்பினார்; பாராளச் செய்தார்;
          மதித்தாரே நம்கலைக் கண்.
9.       கண்மூடி ஆயினார்; கைகட்டிப் போலியரும்
          மண்ணாகி விட்டார் மதித்து.
10.     மதித்தவரும் மாய அரங்கேறி நின்றார்
          கொதித்திலா் ‘என்மெனமக்’ கென்று









வல்லவளுக்கு வல்லவள்


வல்லவளுக்கு வல்லவள்
குளத்தூரு குப்பாயி - அவள
சுட்டுன்னு சுருட்டிப்புட்டா
சூளுா் சுப்பாயி
கருத்தா கவுத்திப்புட்டா
களத்தூரு கருப்பாயி - அவள
மதியோ மடக்கிப்புட்டா
மருதூரு மருதாவி
-        மு.சிவசுப்பிரமணியன்

சிவன் தலையில் இருக்கும் கங்கை யார்


சிவன் தலையில் இருக்கும் கங்கை யார்

          சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர். சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும். அதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம் .
          அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டிருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை எல்லாம் ஒரு உபாதை கூறும்படி கேட்டான். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.
          பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள். “தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வேண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்.”
          ”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான்என் வலிமையை தாங்க முடியும்” என்று கூறி மறைந்தாள்.
          பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார்.  சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள்.
இந்த சம்பவத்தை முன்னிட்டு கங்கைக்கு பகீரதை என்ற பெயரும் வழங்குவதுண்டு. இனியாவது சிவனுக்கு ஒரே மனைவி என்று உரைப்போம்
-தே.தீபா



மற்றவர்களுக்கு வழிகாட்டுவோம்.!


மற்றவர்களுக்கு வழிகாட்டுவோம்.!

          அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள், “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”
          கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள். திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள், “அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?
          இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை... இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..” கணவன் அமைதியாகச் சொன்னான், “இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்” இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன. நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. 
          ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை. ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்  இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.  அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...
தே.தீபா

பழமொழி உண்மைப்பொருள்


பழமொழி உண்மைப்பொருள்

            சும்மா கிடப்பதே சுகம். இப்பழமொழி உடல் உழைப்பின்றி எந்த வேலையும்  செய்யாமல் சும்மா இருப்பது சுகம் என்று இன்று பொருள் கொள்ளப்படுகிறது.  ஆனால் இதன் உண்மைப் பொருள் வேறு மனித மனம் எதையாவது நினைத்துக் கொண்டு இருக்கும்.  அலைபாயும் மனதின் எண்ணங்களை அடக்குதல் என்பது, கடுமையானது  இங்ஙனம் அடங்காமல் இருக்கும் மனதை அடக்கி அலைபாயும் மனதின் எண்ணங்கள் அடங்கி சும்மா இருக்கும் நிலையே சுகம் என்பதே இப்பழமொழி உணா்த்தும் பொருளாகும்.

பேரா.சே.செந்தமிழ்ப்பாவை