செவ்வாய், 30 அக்டோபர், 2018

பழமொழி உண்மைப்பொருள்


பழமொழி உண்மைப்பொருள்

            சும்மா கிடப்பதே சுகம். இப்பழமொழி உடல் உழைப்பின்றி எந்த வேலையும்  செய்யாமல் சும்மா இருப்பது சுகம் என்று இன்று பொருள் கொள்ளப்படுகிறது.  ஆனால் இதன் உண்மைப் பொருள் வேறு மனித மனம் எதையாவது நினைத்துக் கொண்டு இருக்கும்.  அலைபாயும் மனதின் எண்ணங்களை அடக்குதல் என்பது, கடுமையானது  இங்ஙனம் அடங்காமல் இருக்கும் மனதை அடக்கி அலைபாயும் மனதின் எண்ணங்கள் அடங்கி சும்மா இருக்கும் நிலையே சுகம் என்பதே இப்பழமொழி உணா்த்தும் பொருளாகும்.

பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக