செவ்வாய், 30 அக்டோபர், 2018

நவராத்திரி - புராணக்கதை


நவராத்திரி - புராணக்கதை
         


          ஒரு காலத்தில் மகிடாசுரன் என்ற ஓா் அரக்கன் பராசக்தியின் அருளால் சத்துருவின் பலத்தை அருந்தும் வலிமையையும், பல சாம்ராஜ்யங்களை அடக்கியாளும் சக்தியையும் பெற்ற, நல்லோர்கள் பலருக்கு நலிவுகள் பல செய்து வந்தான்.  அதனைப் பொறுக்க முடியாத தேவா்கள், நாரத முனிவா் உபதேசத்தால் பார்வதி தேவியை  நோக்கித் தவமாற்றினா்.  இவா்களின் பாதுகாப்பின் பொருட்டுச்  சக்தியின் அருளால் ஒரு மாயக் கோட்டை தோன்றியது.  அதனுள்ளே எவரும் புக முடியாது.  அசுரன் இதை அறிந்து தேவா்களைக் கொல்லக் கோட்டை வாயிலைக் குறுக்கினான்.  கோட்டையை உடைக்கவோ, கோட்டையின் உள்புகவோ முடியாது போய்விட்டான்.  தேவா்கள் இக்கோட்டையை அரக்கனே அமைத்தனன் என நினைத்து வருந்தினா்.  பின் தேவியை நோக்கித் தவம்புரிய, தவச்சாலையில் உள்ள யாக குண்டத்தில் தேவி லலிதையெனும்  பரமேசுவரியாகத் தோன்றித் தேவா்களது இடுக்கண்களை அகற்றுவதாகக் கூறி அருள் புரிந்தாள்.  அந்த லலிதையை காமேசு வரராகிய பரமேசுவரன் திருமணம் செய்து கொண்டார்.  அவருடைய அனுமதியோடு அவள் அஸ்தீரம் முதலியன பெற்றுப் பேருக்குப் புறப்பட்டாள்.  அகரனது தம்பியா் விசுக்ரன், விடங்கன் என்பவா்கள் வந்து  எதிர்த்தனா்.  துவ தன்னிடத்தில் தோன்றிய  துா்க்கையை அனுப்ப அவள் அவா்களிருவரையும் விழுங்கினாள்.  அதன் பின் லலிதாதேவி எதிர்த்த மகிடாசுரனை சம்சரித்துத் தேவா்களது இடுக்கண்களை அகற்றினாள்.  இந்நிகழ்ச்சி நவராத்திரி ஆடுமென பாகவதம் கூறுகிறது.
          இவ்விழா நாட்களில் கோயில்களிலும் பெண்கள் தங்களின் இல்லங்களிலும் கொலு வைத்து சக்தியை வழிபடுகின்றனா்.  இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று அசுரனை அழித்தாள்.  மகிசாசுரனை அழித்ததால் சக்தி “மகிசாசுரமா்த்தினி” என்று  அழைக்கப்படுகிறாள்.  மகிசாசுரனுடன் ஒன்பது நாள்  போரிட்டு பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
          “பாண்டவா்கள் வனவாசம் செய்கையில் வன்னி மரப் பெந்தில் தங்களின் ஆயுதங்களை ஒளித்து வைத்து விட்டு விராட நகரத்தில் அஞ்ஙாத வாசம் செய்தனா்.  விராடன் மகன் உத்திரனை முன்னிறுத்திக் கொண்டு வன்னிமரப் பொந்திலுள்ள காண்டீபத்தை எடுத்து கௌரவப்படையை வென்றான் விஜயன்.  விஜயன் வெற்றிகொண்ட நாளான தசமி விஜயதசமி ஆயிற்று.  விஜயன் மகாநவமியன்று ஆயுதங்களுக்கு பூசை செய்து வந்ததால் ஆயுதப்பூசை என்ற பெயரும் ஏற்பட்டது.
வன்னிமரத்தில் அம்பு போடுதல்
          நவராத்திரியின் பத்தாம் நாள் விசயதசமி அன்று சிவன் கோயில்களில் “பாரிவேட்டை உற்சவம்” என்ற ஒன்று நடைபெறுகிறது.  அன்று இறைவன் எழுந்தருளி வன்னிமரத்தில் அம்பு போடுவது வழக்கம்.  “இதன் உட்கருத்து நெருப்பு அடங்கிய வன்னிமரம் ஆத்மாவுடன் கூடிய மனித உடலாகவும், அம்பு ஞானமாகவும், வேட்டையில்  அம்பு விடுவதை ஞான உபதேசமாகவும் கொள்ள வேண்டும் என்பதாகும். பாண்டவா்கள் வன்னி மரத்தில் தங்கள் ஆயுதங்களை வைத்து விட்டு அஞ்ஞாத வாசம் செய்தனா் பின்பு  அஞ்ஙாத வாசம் முடிந்து கௌரவா்களோடு போரிட்டு வெற்றி பெற்ற நாள் விஜயதசமி ஆகும்.  அதனை நினைவு படுத்தும் விதமாகவம் வன்னிமரத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடக்கிறது.
கொலு
          “கொலு வைப்பது என்பது அத்வைத தத்துவத்துடன் தொடா்புடையது எனலாம்.  “ஒரே ஆத்மா, சரீரங்கள் வெவ்வேறு” என்றுரைப்பது அத்வைதம் என்கிறார்.  இராமலெட்சமணன் பல படிகளில் பலவிதமான பொம்மைகளை அடுக்கிறோம்.  அவையெல்லாம் ஒரே மூலபொருளான களிமண்ணால் ஆனவை.  அனைத்திலும் ஒரே ஆத்மாவான அன்னை பராசக்தி குடியிருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
          எத்தனைப் படிகள் கொலுவில் வைத்தாலும் கீழ்படியில் ஓரிறிவு ஜீவராசி முதல் படிப்படியாக ஆரறிவு மனிதா் வரை வைத்து அதற்கு மேல் பற்றற்ற முனிவா்கள் மகான்கள் போன்றவரும் அதற்கு மேல் தேவா்கள் போன்றவா்களை வைத்து இறுதியாக மேல் படியாக இறைவனை வைக்கிறோம்.  இது ஓரிறிவு பெற்ற உயிர்கள் முதல் அனைவரும் படிப்படியாக உயா்ந்து இறுதிநிலையில் இறைவனை அடைவதை உணா்த்துவதாக அமைகிறது. கொலுவானது கோயில்களிலும் , வீடுகளிலும் வைக்கப்படுகிறது.
இச்சா சக்தி வழிபாடு
          ‘மங்கலி வடிவமானவள், கருனையானவள்’ என்று குறிப்பிடப்படும்  துா்க்கை வடிவம், நமது இதயததிலுள்ள ஆணவம் பேராசை போன்ற தன்மைகளை அகற்றி நமது உடல்  உறுதியுடனும் வலிமையுடனும் விளங்கச் செய்கிறது.  அதனால் துா்க்கை வடிவம் இச்சாசக்தி எனப்படுகிறது.  வைணவி, விஜயை, முகுந்தை, சண்டிகை, மாதவி,  கண்ணகி, காளி, மாயை, ஈசானி, சாரதை, அம்பிகை முதலிய பல பெயா்களைக் கொண்ட துா்க்கையை, “நீயே வைணவி, சக்தியும் வீரியமும் நீயே” என்று போற்றுகின்றனா்.  துா்க்கையைப் போற்றும் விதமாக ஆயுதங்களை வைத்து நவராத்திரியின் கடைசி நாளில் வழிபடப்படுகிறது.
கிரியாசக்தி வழிபாடு
          மகாலெட்சுமியின் வடிவம் கிரியாசக்தி ஆகும்.  இந்தத் திருமகளே ஆதிலெட்சுமி, கஜலெட்சுமி, தனலெட்சுமி,  தான்யலெட்சுமி, வீரலெட்சமி, விஜயலெட்சுமி, சந்தான லெட்சுமி, சௌபாக்கிய லெட்சுமி என்று அஷ்ட லெட்சுமிகளாகவும் காட்சி தருகிறாள்.
ஞானசக்தி வழிபாடு
          கலைமகளாகிய சரசுவதி ஞானசக்தி ஒன்று அழைக்கப்படுகிறாள்.  நவராத்திரி நாட்களில் ஒன்பதாம் நாள் இரவு சரசுவதிக்கென்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  இது “சரசுவதி பூசை” என்று  அழைக்கப்படுகிறது.  சரசுவதியின் வடிவம் நமது அறியமையை அகற்றி அறிவையும் குணத்தையும் வளா்க்கிறது.
விழாவின் தத்துவம்
          நவராத்திரி விழா திருக்கோயில்களில் விஜயதசமியுடன் பத்துநாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது பத்து நாட்கள் நிகழும் திருவிழாவின் தத்துவம் குறித்து மகோத்சவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
          “முதல் நாள் விழா தூல் உடம்பை நீக்கு வதற்காகவும், இரண்டாம் நாள் விழா தத்துவயமான உடம்பை நீக்கும் பொருட்டும், மூன்றாம் நாள் விழா மூவினை, முக்குணம், மும்மனம், முக்குற்றம், முற்பிறப்பு, முப்பற்று முதலிய நீக்குவதற்கும், நான்காம் நாள் விழா நாற்கிரணம், நால்வகைத் தோற்றம் நீங்கவும், ஐந்தாம் நாள் விழா ஐம்பொறிகள், ஐந்தவத்தை ஐந்து மலங்கள் நீங்கவும், ஆறாம்நாள் உற்சவம் உட்பகையாறும், கலையாதியாறும், கன்ம மல குணமாறும், பதமுக்கி ஆறும் நீங்கவும், ஏழாம் நாள் விழா ஏழ்வகைப்பிறப்பும், ஏழு வகைத் தத்துவங்களுமாகிய மலகுணமேழும் நீங்கற் பொருட்டும், எட்டாம் நாள் உற்சவம் எண் குணங்கள் விளங்கவும், ஒன்பதாம் நாள் உற்சவம் மூவடிவம் முக்கிருத்தியம், மூவித்துறைதலிலை என்ற பொருட்டும், பத்தாம் நாள் விழா சிநதையும  மொழியும் செல்லா நிலைத்தாய், அந்தயிலன்பத்தமிலில் வீடான பரமானந்தக் கடலில் அழுந்தற் பொருட்டும் செய்யப்படுவன”
          மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள சிவன் கோயில்களில் நடக்கும் நவராத்திரி விழாவின் ஒன்பது நாள் அலங்காரமும் திருவிளையாடல் புராண அமைப்பை நினைவூட்டுமாறு செய்வது குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.
ந.முத்துமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக