வெள்ளி, 7 டிசம்பர், 2018

கலங்கைர விளக்கு (குறுங்கதை)


கலங்கைர விளக்கு (குறுங்கதை)
            இரவு நேரம்  கடலலைகள் கைவிடப்டோரை வரவேற்க தனது கரங்களை விரித்து ஓலமிட்டுக் கொண்டிருந்தது.  தூரத்தில் ஒருவன் கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றும் சுனாமிக்கு இரையான அவனது பெற்றோரை நினைவுப் படுத்தியது. சுற்றத்தாரால் கைவிடப்பட்டு தனது வாழ்க்கையில்  பிரகாசமின்றித தவிக்கின்ற இவனது பெயரோ பிரகாசம் மன அழுத்தத்தால் உந்தப்பட்டு எழுந்து நடக்க ஆரம்பித்த பிரகாசத்தின் மீது பளிச்சென்ற  ஒளி பிரகாசமாக அவனது முகத்தில் பட்டது திடுக்கிட்ட அவன் வெளிச்சத்தை நோக்கி நடந்தான்.  அவனுக்குத் தெரியாது கலங்கரை விளக்கு  அவனது வாழ்வில் திருப்பு  முனையை ஏற்படுத்து மென்று வெளிச்சம் தோன்றிய இடத்தின அருகில் சென்ற போது அவனை பிரமிக்க வைத்தது ஒரு நிகழ்ச்சி தனது வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்ற எய்ட்ஸ் நோயாளியும் மாற்றுத் திறனாளி ஒருவனும் மீன் வலைகளைப் பின்னிக் கொண்டிருப்பதைக் கண்டான். இச்சம்பவமானது  அவனது முடிவை மாற்றக் காரணமாயிருந்தது.  ஆம் அவ்விருவரின் முயற்சியும் செயலும் பிரகாசத்தின் உள்ளத்தை  பிரகாசிக்கச் செய்து உணர வைத்தது.  மறு வாழ்க்கை உண்டென்றது.  பிரகாசத்தின் வாழக்கையானது எய்ட்ஸ் நோயாளியின் வாழ்க்கைக்கும் மாற்றுத் திறனாளியின் வாழ்க்கைக்கும் சமா்ப்பணமாக மாறி ஒளி வீசத் தொடங்கியது.  ஒளி வீசி வழிகாட்டும் கலங்கரை விளக்காக!
வே.ஜெயமாலா






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக