வெள்ளி, 7 டிசம்பர், 2018

தமிழாயிரம்


தமிழாயிரம்
23. அகத்தியப் புரட்டு
1.         என்றதால் செக்கிழுக்கும் மாடாய் இழிவுற்றார்;
            நன்றென்றார் நம்பகையா் ஏற்று.
2.         ஏற்றுவந்த கொத்தடியார் ஏதும் எழுத்தறியார்
            போற்றிய போர்களைப் போல்.
3.         போல்பார்ப்பார் தம்நெறியைப் போற்றினார்.  பார்ப்பார்தாம்
            மேய்ப்பாராய் நிற்கப் புகுந்து.
4.         புகுந்தார் புனைந்தார் புனைகதைகள்; பார்ப்பார்
            மிகுந்த நிலைமை யுற
5.         நிலைபெற்ற பொய்ச்சடங்கால் நின்ற அறிவும்
            குலைவுற்றுக் கெட்டது  கூறு.
6.         கூறினார் பொய்யாய்ப் பொதியத் தகத்தியன்
            கூறினான் முத்தமிழ் என்று.
7.         என்றுமே இல்லா ஒரு நுலை நன்றாம்
            ‘மகத்துவம்’ என்றார் மதித்து.
8.         மதித்ததொல் காப்பியன் மாணூலைத் தள்ளக்
            கதித்த கதைதான் அது.
9.         அதனை உருவாக்கி ஓா் நூல் உளதாய்
            அகத்தியப்போ் சூட்டினார் ஆய்ந்து.
10.       ஆய்ந்தறிதந்தால் முத்துவீரா் நூலுக்குப் பின்வந்து
            சாய்ந்தநூல் என்னல் தெளிவு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக