வெள்ளி, 7 டிசம்பர், 2018

சின்ன சின்ன ஆசை


சின்ன சின்ன ஆசை
            வீடே அதிரும்படியாக ஓயாத வரட்டு இருமல் சேகரை  வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.
            அறுபதைத் தாண்டிவிட்டால் அன்றாடம் பலருக்கு இரவும்பகலும் இணைபிரியாமல் துணையாயிருப்பது நோய்கள் மட்டும் தான்.
            “என்னவுட்டு இருமலோ இப்புடி விடாப்பிடியாய் பிடிச்சிக்கிட்டு பாடாய்ப்படுத்துதே இந்த மனுசன.. ஈரக்குலை அதிர்ற அளவுக்கு இப்படி  நாள்  முழுக்க இருமுனைா இந்தத் தொண்ட என்னத்துக்கு ஆகுறது? கடவுளே என்தான் இப்பிடி கஷ்டத்தக் கொடுக்குறியோ.  தெரியல”  சேகரின் மனைவி தேன்மொழி அம்மியில் தூதுவலையை  விழுதாய் அரைத்துக் கொண்டு புலம்பிக்கொண்டிருந்தாள்.
            மருமகள் அமுதா பாலில்  மிளகுதட்டிய போட்டுக் கொண்டிருந்தாள்.  பேத்திகள் விடாமல் இருமிக் கொண்டிருந்த தாத்தாவின் அருகில் நின்கொண்டு இமை சிமிட்டாமல் பாவமாய்ப் பார்த்துக்  கொண்டு நின்றார்கள்.
            இது எதுவும் தெரியாதது போல், ஏதையும் கவனிக்காதது போல் வழக்கம் போலவே தொலைக்காட்சியையும் கையிலிருந்த அலைபேசியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் பாலு.
            இருமலின் சத்தம் கூடக்கூட தொலைக்காட்சியின் சத்தமும் கூடிக்கொண்டு இருந்தது.  கடவுளைத் துணைக்கழைத்து வராததால் என்னவோ தேன்மொழி தன் மகனை அழைக்க எழுத்து உள்ளே சென்றாள்.
            உள்ளே போன பின்னும் ‘கேட்போமா வேண்டாமா’ என் யோசனையில் தன் மகனையே  உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள் “ஏம்பா உங்கப்பாவுக்கு இருமி இருமி தொண்டையே புன்னாப் போச்சு  ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்குக் கட்டிட்டுப்  போய்ட்டு வரலாம்லப்பா.
            ஒரு கையில் டிவிரிமோட்டும் மறுகையில் செல் போணுமாய் இருந்தவன் டிவி ரிமோட்டை எந்திவிட்யடி கத்தினான். “ஒரு நாளாவது வீட்டுல நிம்மதியா இருக்கலாம்னா முடியுதா இங்க? மழையில நனைஞ்சிருப்பாரு.. இல்ல வோ்வையோட குளிச்சிருப்பாரு.. இல்லாட்டினா புகை தூசில மூக்கை கொடுத்திருப்பாரு.. சும்மாயிருந்தா எப்படி இருமல் வரும்? எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு வினைய இழுத்துக்கிட்டு..ச்சை.. இவருக்கு இதே பொழப்பாப் போச்சு.. ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே கிடந்த என்னவாம்? அடங்காமத் திரிஞ்சா இப்படித்தான்  காட்டுக்கத்தலாய்க் கத்தினான் பாலு.
            வெளியே திண்ணையில் மக்களின் கத்தலைக் கேட்டுக் கொண்டிருந்த சேகா் பொங்கி வந்த அழுகையை இருமலோடு சோ்த்து அடக்கிக் கொண்டார்.
            தேன்மொழிக்கு இப்படி திட்டுகள் வாங்குவது புதிதில்லை.. தான் வாயைத் திறந்து எதைச் சொன்னாலும் வெடுக் வெடுக்கென்று தேள் கொடுக்காய் கொட்டித் தள்ளுகிறவனிடம் வேறெதை எதிர் பார்த்தவிடமுடியும்?   இருந்தாலும் பாழாய்ப் போன மனசு கேட்டுத் தெலைய மாட்டீங்குதே..
            எல்லாவற்றையும் கவலையோடு கவினித்துக் கொண்டிருந்தார் அமுதா.  இரண்டு வாரங்களில் பாலுவுக்குப் பிறந்தநாள் வந்தது.  இருவரும் வேலைக்குச் செல்வதால் வேலைவிட்டு  வந்து மாலை நேரத்தில் தான் ஒவ்வொராண்டும் கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள்.
            பிறந்தநாளென்று அலுவலகத்தில் மேலாளர், உடன் பணியாற்றும் பணியாளர்கள் கொடுத்த பிறந்த  நாள்  பரிசுகளைத் தூக்க முடியாமல்  தூக்கிக் கொண்டு வந்தான்  வாசலில் நின்று வரவேற்க மனைவி நிற்காததே பெரிய ஏமாற்றமாயிருந்தது.  வீட்டினுள் நுழைந்து அறைக்குள் அடுக்கிவைத்துவிட்டு சுற்று மற்றும் தேடிப்பாத்தான்.  பிள்ளைகள் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தார்கள்.. அப்பா அம்மாவைத்தான் தேடுகிறாரென்பதை உணா்ந்த பிள்ளைகள் “அப்பா.. அம்மா ஆபிஸ்ல் வேலையிருக்காம்.  இன்னிக்கு வர லேட்டாகுமாம். மகன் சொன்னதும் ஏமாற்றம் ஆத்திரமாய் மாறியது.
            அமுதா ஏழு மணிக்குத்தான் வீடு வந்தான்.  வந்ததும் உடைமாற்றி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள், மணி எட்டரையைத் தாண்டியது. அதற்குமேல் பொறுமையில்லாமல் “இன்னிக்கு   என் பிறந்தநாளுனு கூட உனக்கு ஞாபகம் இல்லாமல் போய்ருச்சில்ல..  “அமுதாவின் நேருக்கு நோ் நின்று கேட்டான்.
            “அய்யய்யோ.. ஆபிஸ்ல ரொம்ப வேலை. மன்னிச்சிடுங்க.. “என்று சொன்னவாமே அஞ்சறை டப்பாவிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டி “கேக் வாங்கிட்டு வாங்க.. வெட்டலாம் என்றாள்.  பாலுவிற்கு ஆத்திரம்  எரிமலையாய் வெடித்தது.
            “நா என்ன பிச்சைக்கரனா? உனக்கு சம்பாதிக்குற திமிர் வந்துடுச்சு.. ஆபிஸ்ல எவ்வளவு போ் சிரிச்சமுகத்தோட வாழ்த்து சொல்லி எனக்குப் பிடிச்சதெல்லாம் தெரிஞ்சிட்டு கிஃப்ட் கொடுத்தாங்க.. நி என்னபான்னா கடனுக்குப் பணத்தை நீட்டுற?  உங்காசு யாருக்கு வேனும்?” கத்தினான் பாலு.  வழக்கம் போல பொறுமையோடிருந்த அமுதா “உங்களுக்கிருக்கிற சின்னச் சின்ன ஆசைகளப் போலத்தானே மத்தவங்களுக்கும் இருக்கும்.  எண்ணிக்காவது மாமாகிட்ட ‘சாப்பிட்பீங்களாப்பா.. மாத்திரை போட்டீங்களாப்பா.. இப்போ உடம்புக்குப் பரவாயில்லையான்று கேட்டிருக்கீங்களா? மாசம் ஒன்னாம் தேனியானா பெட்டிக்கடை, பால்காரனுக்குப் பணம் கொடுத்து கடனை அடைக்குற மாதிரி பெத்தவங்களுக்கும் பணம் கொடுக்குற தோட நிறுத்திடுறீங்க.. பெட்டிக்க்கடைக்காரனும் பெத்தவங்களும் ஒன்னாங்க?  எவ்வளவு காசுக் கொடுத்தாலும் நீங்க பாசமா அனுசரணையா பேசு ஒத்த சொல்லுக்கு ஈடாகுமா?  பெரியவங்கள இருக்குறப்பவே அவங்கள நல்லாக் கவனிச்சுக்காம இல்லாதப்போ அழுது புலம்புறது முட்டாள் தனமில்லங்க.. அது அயோக்கியத்தனம்.  அப்பா அம்மாகிட்ட முகம் கொடுத்து பேசி சிரிச்சு எத்தனை வருசாமாவுதுன்னு  கொஞ்சம் நினைச்சுப் பாருங்க ஏ டி எம் மிஷினும் வாடிக்கையாளரும் மாதிரியாங்க  குடும்ப உறவு?”
            அமுதா கேட்கும் எந்தக் கேள்விக்கும் பாலுவால் பதில் சொல்ல முடியவில்லை.  ‘தப்பாச் சொல்லியிருந்தா மன்னிச்சுக்கோங்க.. உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ரவா லட்டுதான் செஞ்சிகிட்டு இருக்கேன்.  பத்து நிமிஷம் வெய்ட பண்ணுங்க.  சாப்பிடலாம்  சொல்லிவிட்டுப் போன அமுதா போன திசையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
            மனிதனுள் புயல் அடித்து ஓய்ந்து போலிருந்தது.  புதிதாயப் பிறந்தவனைப் போல உணா்ந்தான்.  வேக வேகமாய் அலைபேசியில் டயல் செய்து  பேசத்தொடங்கினாள்.  “அப்பா.. நல்லாயிருக்கீகளா? சாப்பிட்டீங்களா? மாத்திரை போட்டீங்களா?”
            உள்ளே அமுதாவின் கண்களிலும் ஊரில் சேகரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் துளிர் விட்டுக் கொண்டிருந்தது.. இன்னும் இரு கண்களும் கலங்கித் தவித்தன.. அவை பாலுவின் கண்கள்.
-முனைவா். ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக