செவ்வாய், 25 ஏப்ரல், 2017

புதியதோர் உலகு செய்வோம்!
அன்னையும் பிதாவும் ஈந்த இவ் வுலகில்
அன்பும் அறிவும் சிறப்பென கற்பிப்பார்!
ஆன்றோர் வாழ்ந்த பூவுலக வாழ்வினை
ஆழ்ந்தறிந்து புதுப்பாரதம் படைப்போம் வாரீா்!

ஆயிரம் சாத்திரங்கள் உண்டெனினும் அன்பொன்றே
ஆசானாய் ஞாலத்தில் உயிரென விளங்கும்!
 சாதி மதங்கள் பிரிவினை  வேரறுத்து
சமத்துவம் எண்ணிப் புத்துலகம் செய்வோம்!

நோ்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும்
நேரிய வாழ்வும் பாரினில் விதைத்திடுவோம்!
பண்பட்ட வாழ்வான அன்பு அகராதி படைப்போம்
பகையினை விடுத்து நட்பை நிலை நாட்டிடுவோம்!

வேற்றுமை தீவிரவாதம் கொலை கொள்ளை
வேள்வியில் தீயிட்டு அன்பொன்றே பயிரிடுவோம்!
உயா்வு தாழ்வு முத லாளித்துவம் முகத்திரையினை
உறித்து மனித சமத்துவத்தைக் கற்பிப்போம்!

பெண் ணடிமை தலைதாழ்ந் திடினும்
ஆண்வர்க் கமென்ற பெண்ணினம்  தோன்றி...
பெண் மரக் கிளையான கல்விச்சுய சிந்தனைக்குப்
படித்ததி மிரென்ற பெயர்சூட்டி அகற்றுகின்றனா்!

சுதந்திர இந்தியாவுன் சுதந்திர மெங்கே?
சுதந்திர மனிதரான அரசியலா் கைப்பிடியில்
சிறந்த வாழ்வென வாழும் பெரியோர்கள்
சிறந்த வாழ்விழந்து மடியும் விவசாயிகள்!

சல்லிக்கட்  டுக்கென இணைந்த இளைஞா்கள்
சனநாயகத் தினைபுதுப் பிக்க இணை வதென்றோ?
அன்னை மடியில் மழலையான இளைஞனே
அன்னையான தமிழகத்தை மீட்போம் வாராய்!

புத்துலகம் படைக்கபுதுப் படைப்பாய்  வீறுகொண்டு
புனித உலகாய் மாற்ற இணைவோம்!
மக்களி னங்களை ஒன்றிணைத்து வீரம் விதைத்து
மக்கள் நாடாய் மாற்றி மகிழ்ந்து வாழ்வோம்!

 -தே.தீபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக