புதன், 26 ஏப்ரல், 2017

மோர் குழம்பு

மோர் குழம்பு
தேவையானப்பொருட்கள்
1. கடைந்த மோர் 250 மி.லி
2. வெங்காயம் சிறியது -1
3. சீரகம் -1/ 2 தேக்கரண்டி
4. பூண்டு - 1
5. இஞ்சி - சிறியது
6. மஞ்சள் தூள் - 1/ 2 தேக்கரண்டி
7. பெருங்காயம் - 2 சிட்டிகை
8. தேங்காய் சில்லு -1
9. மிளகாய் தூள் - 1/ 2 தேக்கரண்டி
10. கடலை மாவு - 1 தேக்கரண்டி
11. கடுகு - 1 தேக்கரண்டி
12. கருவேப்பிலை - சிறு கொத்து
13. எண்ணை - தேவையான அளவு
14 உப்பு - தேவையான அளவு
15. தண்ணீா் - ஒரு கப்பு
செய்முறை
            தேங்காய், சீரகம், இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், கடலைமாவு, இவற்றை ஒன்றாக அறைத்து வைக்கம்.  வாணெலியில் எண்ணை விட்டு மிதமான தீயில் காய வைக்கவும், எண்ணெய் காய்ந்தவுடன்   கடுகு சோ்க்கவும் கடுகு பொறிந்தவுடன் கருவேப்பில்லை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.  வெங்காயம் நன்கு வெந்தவுடன் மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்க்கவும்.  பின்னா் அரைத்து வைத்த விழுதை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும், ஒரு கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும் இடையே கலக்கிவிடவும் இப்பொழுது மோர் சோ்த்து குறைவான தீயில் வேகவிடவும் குழம்பு பொங்கி வரும் போது நெருப்பை அனைக்கவும். சுவையான மோர் குழம்பு தாயார்.
பெ.குபேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக