புதன், 26 ஏப்ரல், 2017

தமிழாயிரம்

தமிழாயிரம்
அகராதி-4
4. தமிழழிப்பு
1. அரணாக நின்ற அறிவறிந்த சான்றோர்
    பரணை நினைத்துப் படி.
2. படித்தும் படியெடுத்தும் பாராட்டிக் கற்றும்
   படிப்பித்தும் காத்தார் பலா்.
3. பல்காத்தும் காவாமல் பாழாய் விடுத்தார்
  சிலரால் சிதைந்தன மிக்கு.
4. மிக்க கலைநூல்கள் மேதக்க வாழ்வியல்கள்
    ஒக்க அழிந்த ஒருங்கு.
5. ஒருங்கழித்த கேட்டில் ஒருபாதி நீரில்
   நெருப்பில் விடுத்த நிலை.
6. நிலைத்தவை தாமும் நெடிதழிய வைத்தார்
    புலைத்தன ஆரிய ரே.
7. ஆரியரால் போயதமிழ் ஆரறிய வல்லாரால்
   பேரழிவே இன்றுவரை பேசு.
8. பேச்சிழந்த ஆரியத்தால் பேசுதமிழ்ப் பேரழிப்பு
   மூச்சிழந்து போகும் முறை.
9. முறைகேடாய்க் கோயிற்குள் மூண்டெரிக்கும் கேடு
    முறையிட்டும் தீரா முடிவு.
10. முடியும் தமிழென்ன மூதாய்வு சொல்லத்
      துடியாத் தமிழா் துரும்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக