செவ்வாய், 25 ஏப்ரல், 2017

நீட் தோ்வு

நீட் தோ்வு
நாடு முழுவதும் மருத்துவப்பொது நுழைவுத் தோ்வான ‘நீட்’ தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.  எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான நுழைவுத் தோ்வு 103 இடங்களில் நடைபெற இருப்பதாக மத்தியக் கல்வி நிறுவனமாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் 41.41 சதவீதம் மாணவா்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதால் புதிய தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  தமிழ் நாட்டில் நாமக்கல், நெல்லை மற்றும் வேலுர் போன்ற மாவட்டங்களில் புதிதாக தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  மாணவா்கள் தமிழ் உள்ளிட்ட பத்து மொழிகளில் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
            ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.  சட்டப் பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இது அரசுக்கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்குத் தான் விலக்கு கோரப்படுகிறது.  தனியார் கல்லூரிகளுக்கோ, நிகா்நிலை பல்கலைக்கழகங்களுக்கோ தேர்வில் இருந்து விலக்குக் கோரவில்லை
            சிறுபான்மை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசிற்கு ஒதுக்க வேண்டும் என்று கன்னியாகுமரியைச் சோ்ந்த வித்யாஷரோன் என்பவா் உயா்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் உயர்நீதி மன்றம் அந்த மனு மீதுான விசாரனையின் போது நிட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
            நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்குத் தற்போது விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசும் கைவிரித்து விட்டது.  இதனால் பாதிக்கப்படுபவா்கள் கிராமப்புற மாணவா்கள் தான்.  அந்த மாணவா்கள் பள்ளிக்குச் சென்று தமிழக அரசு கொடுக்கும் இலவச பாடப்புத்தகத்தைப் படித்து கல்வியைப் பெறுபவா்கள்  அவா்கள் நகா் புற மாணவா்களுக்கு இணையாக பயிற்சிக்  கூடத்திற்குச் சென்று கற்று போட்டி போட முடியுமா? என்பது கேள்விக்குறி  அது அவா்களுக்குக் காணல் நீராகவே உள்ளது.
            தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மட்டுமே இந்த சலுகையினைக் கேட்கிறது.  இதனை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து சட்ட வல்லுநா்களை ஆலோசித்து விரைவில் சாதகமான முடிவு எடுத்தால் கிராமப்புற மாணவா்களின் எதிர்காலம் சிறப்புற அமையும் என்பதில்  சிறிதளவு ஐயமில்லை.
-ந.முத்துமணி


                                   
                                   






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக