செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அடடே!

அடடே!
அடடே
ஆண்டவன்
படைப்பில்
விந்தைகள்
இப்பூமியில்!

ஐந்தறிவு
படைத்த
உயிரினத்தில்
ஐயாயிரம்
சிந்தனைகள்
துளிர்விடுகிறது
இப்பூமியில்!

வியந்து
பார்க்கும்
விந்தனை
மனிதா்கள்
இப்பூமியல்!

காற்று
தன் சுவாசத்தை
விட
மறப்பதில்லை
எப்பொழுதும்
தென்றலாய்
இப்பூமியில்!

வான் மண்டலங்கள்
வழித் திறந்து
மானுடம்
வானுயரச்
செய்யும்
கதிரவனாய்
இப்பூமியில்!

உழவனின்
வியா்வைக்கு
வெற்றி தரும்
விந்தையான
விடியலாய்
மழைத்துளி
இப்பூமியில்!

அறியாமை
இருளை அகற்ற
ஞானச்சுடராய்
விளக்கேற்றும்
கல்வி யெனும்
கலைமகள்
இப்பூமியில்!

குற்றம்
அகற்றும்
குல விளக்காய்
குன்றாத
இளமையுடைய
குருகுலமான
ஆசான்
இப்பூமியில்!

அணுவைத்
துளைத்து
ஆழ்கடலில்
ஆச்சரியங்களைத்
தேடும்
ஆய்வாளர்கள்
இப்பூமியில்!

மானுடம்
போற்றும்
மனிதா்கள்
மனிதநேயம்
காத்த
தேசத் தலைவா்கள்
இப்பூமியில்!

மதங்கள்
மதம் மாறினாலும்
மானுடப் பிறவி
ஒன்றேயெனும்
கொள்கையுடைய
சீர்திருத்தவாதிகள்
இப்பூமியில்!

விழித்துக்
கொண்டு
கனவு காணுங்கள்
என்னும்
அற்புத மனிதா்
வாழ்ந்த மகான்
இப்பூமியில்!

அடடே!
ஆண்டவனின்
படைப்பில்
எத்தனை
விந்தைகள்
இப்பூமியில்!
அடடே!
ஆ.அருள்சாமி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக