வெள்ளி, 27 ஜனவரி, 2017

சுற்றுலா





கல்விச்சுற்றுலா
        தமிழ்ப்பண்பாட்டு மையமும், வரலாற்றுத்துறையும் இணைந்து 24.12.2016 அன்று தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநா் முனைவா்.சே.செந்தமிழ்ப்பாவை அவா்களின் தலைமையில் புதுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள  சுற்றுலாத்தலங்களுக்குச் சென்றோம்.
        முதலில் தமிழா்தம்  ஓவியக்கலையின் சிறப்பைக் கூறும் சித்தன்ன வாசல், கட்டடக்கலை மற்றும் இசைக்கலையின் பெருமையை அறியச் செய்யும் குடுமியான்மலை போன்றவற்றைக் கண்டு களித்தோம்.  இவ்ஓவியங்களும் சிற்பங்களும் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோரின் அறிவுத்திறத்தை நன்கு புலப்படுத்தின. இதனையடுத்துத்  திருக்கோர்ணம் அரசு அருங்காட்சியகத்தில் நம் முன்னோர் பயன்படுத்திய போர்க்கருவிகள் முதல் தீா்த்தங்கரர்கள் சிலைகள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதத்தைக் கண்டு மகிழ்ந்தோம் இதன் பின் கோட்டை கட்டி வாழ்ந்த தமிழா்தம் வாழ்வியலை விளக்கும் திருமயம் கோட்டையையும் போருக்குப் பயன்பட்ட அதன் அமைப்பு முறை, சிறப்பியல்புகள் போன்றவற்றையும் அறிந்தோம்.  ஒரே நாளில் தமிழா்களின் ஓராயிரப்பட்ட சிறப்புகளை அறிய முடிந்ததில் இக்கல்விச்சுற்றுலா பயனுள்ள சுற்றுலாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக