வெள்ளி, 27 ஜனவரி, 2017

பாழ் எய்தும் உலகம்

பால்வெளி ஆகாயமும்
பொருள்கள் வரை படைத்தது
அவற்றில் யாவும்
கரை படியாத் தூய பண்புடையன

ஒளிபடா வான்வெளிக்கு அப்பாலும்
பாழ் என்ற ஒன்றுமில்லை இயக்கம் உண்டு
ஒளிபட்டு நிலவும் நிலத்திலும்
உயிரினத் துடிப்பும்
பொருள்களின் தோற்றமும்
இயக்கமுண்டு

நாளும் ஆராய்ச்சி
அறிவியலோ முளைத்து வளா்கின்றது
முளைக்கும் அறிவியல்
நிலத்திலும் கடலிலும்
அணுவை வெடிக்கச் செய்கிறது - அது
வயிற்றுக்குக் கூழ்கிட்டாது

நிலமும் நீரும் காற்றும்
சீர் கெட்டழிய
உயிரினம் யாவும் பாழ்நிலை
எய்துகின்றது.

நிலம் நீர் காற்று
பாழ்வடா நிலைபெற
பண்டை வேளாண் முறையைப்
பின்பற்றி உழைத்திடு
மானிட சமூகம் மாண்புபெற
ஆணும் பெண்ணும் இணைந்து அகிலமான
உலகம் ஒருகால் பாழ்எனும்
இல்லா நிலை எய்தும்



-பெ.குபேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக