வெள்ளி, 27 ஜனவரி, 2017

இது பொன்னான வேளை..




உறக்கத்தின் பிடியில் இருந்த
இரக்கம் அனைத்தும்
மறத்தின் வேர் பிடித்து
தருக்கம் செய்கின்ற வேளை……….

ஊடகத்தின் ஊழ்வினையால்
ஊனமாய் நின்றிருந்தோர்
உண்மையெனும் உரசலில்
விழுத்தெழுகின்ற வேளை…………

முகநூலில் முகம் புதைத்தோம்
வாட்ஸ் ஆப்பில் வாழ்விழந்தோம்
வசை பாடிய வார்ப்புகள் எல்லாம்
திசை மாறிய வேளை…….

பாசத்தின் பிம்பமெல்லாம்
பாராமுகம் காட்டிவிட்டால்
பாரதம் பிழைப்பதெங்கே? என
பாரெல்லாம் வண்ணம் பூச
பாசத் தமிழர் நாமென
 பாமாலை பாடுகின்ற வேளை……

பண்பதனைப் படித்தவனும்
பண்பாட்டில் நிலைப்பவனும்
பரவி நின்றுவிட்டான்
இனி திரும்பிய திக்கெங்கும்
இன்பத் தமிழோசை
ஈடிலா வாகை பெறும் வேளை……

ஆம்….
இது பொன்னான வேளை
                         - நெ.கிருஷ்ணவேணி

1 கருத்து: