சனி, 23 ஜூன், 2018

வெற்றிப் பாதையில் வீறு நடையிடும் புதிய துணைவேந்தா்


தலையங்கம்
தி.பி. 2049 (கி.பி. 2018)       ஆனித்திங்கள்
தேன் - 2                                                துளி -18



வெற்றிப் பாதையில் வீறு நடையிடும் புதிய துணைவேந்தா்

         வரலாற்றுச் சிறப்பு மிக்க காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராக வரலாற்றுத்துறைப் பேராசிரியா் மாண்பு நிறை என்.இராஜேந்திரன் அவா்கள் ஜீன்-05-ஆம் நாளன்று பொறுப்பேற்றுள்ளார்.
         மாநில, தேசிய அளவில் சாதித்துள்ள  அழகப்பா பல்கலைக்கழகத்தின் உலகத்தரத்தில் உயா்த்திட உறுதி பூண்டுள்ள அவா் துணைவேந்தா் பொறுப்பேற்ற பிறகு
‘பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆற்றல்சார் பல்கலைக்கழக தகுதி நிலையைப் பெறுதல், பல்கலைக்கழக வளாகப் பரப்பிற்கு  ‘வள்ளல் அழகப்பா் வளாகம்’ எனப் பெயா் சூட்டல், பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியையும் மேலும் உயா்த்துதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வேன்.  என அறிவித்தவாறே அதற்கான செயல்திட்டங்களைத் தீட்டுவதிலும் முழு முனைப்போடு அக்கறை செலுத்தி வருகிறார்.
         பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே தேசிய மாணவா்படை உறுப்பினராக, பள்ளி-கல்லூரிகளில் மட்டைப்பந்து வீரராக, சதுரங்கச் சாதனையாளராக மிளிர்ந்த இவா் இளங்கலை, முதுகலைப் படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், இளமுனைவா், முனைவா் ஆராய்ச்சிப் படிப்புகளை சென்னைப் பல்கலைக்கழகத்திலும்  பயின்றுள்ளார்.
         மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்திய வரலாற்று ஆய்வுக்குழு உறுப்பினராகவும் (இந்திய அளவில் 18 அறிஞா்களுள் ஒருவா்) UGC ஆய்வுக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாட்டரசின் தமிழ்வளா்ச்சித்துறையில் தமிழக வரலாறு வரைவுக்குழு உறுப்பினராகவும், தமிழக வரலாற்றுக் குழுமத்தின் பொதுச் செயலாளராகவும் இவைபோன்ற பொறுப்புகளை வகித்துள்ளார்.
         பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைத் தலைவா், பாரதிதாசன் மேலாண்மைப் பள்ளி நிறுவனா் இயக்குநா், தொலைநிலைக்கல்வி இயக்குநா், கலைப்புல முதன்மையா் (2008-2015) பாடத்திட்டக்குழு உறுப்பினா் (1996-2016) RUSA திட்ட ஒருங்கிணைப்பாளா் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்துள்ளார்.
         34 ஆண்டுகள் கல்விப் பணி அனுபவம் உடைய பெரும் பேராசிரியா் ‘சிந்தனைப் பேரொளி’ ‘வரலாற்றுச் செல்வா்’ போன்ற பட்டங்களைப் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெற்றுள்ளார்.
         இவரெழுதிய ‘தமிழ்நாட்டில் தேசியமும், சுதேசியமும்’ என்னும் நூல் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த நூலுக்கானப் பரிசை வென்றுள்ளது.   
         திருச்சி வானொலியிலும், இலண்டன் BBC  யின் தமிழ் ஓசை நிகழ்ச்சியிலும் பலமுறை உரையாற்றியுள்ளார்.
         மேனாள் துனைவேந்தா் பேரா.சொ.சுப்பையா அவா்களின்  பணிக்கால சாதனைகளைப் போற்றியும், புதிய துணைவேந்தராகப் பொறுப்பு ஏற்றுள்ள வரலாற்று நாயகரை வரலாறு படைத்திட வாழ்த்தியும் வணங்கி மகிழ்கிறோம்.
                                                                                                        அன்பின் வாழ்த்துகளுடன்,
தேமதுரம் - ஆசிரியா் குழு


ஆசிரியர்
முனைவா். ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர் 
பெ.குபேந்திரன் 


துணையாசிரியர்

தே.தீபா

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ.மீனாட்சி
ந.முத்துமணி
மு.சிவசுப்பிரமணியன்
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,


காரைக்குடி-3. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக