சனி, 9 ஜூன், 2018

பாராட்ட வேண்டிய பாட மறுசீரமைப்பு


தலையங்கம்
தி.பி. 2049 (கி.பி. 2018)       வைகாசித்திங்கள்
தேன் - 2                                                துளி -17


பாராட்ட வேண்டிய பாட மறுசீரமைப்பு

          வளா்ந்து வரும் தொழில் நுட்ப யுகத்தில் ஒவ்வொரு ஆண்டுமே  பாடத்திட்டத்தில்  மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழலில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த பத்தாண்டுகளாக பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படாமல், அதிலும் குறிப்பாக மேனிலைக் கல்விக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல்  பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து விட்டன.
          தேசிய, உலக அளவில் பிற மாநில, நாட்டு மாணவா்களோடு போட்டியிட்டு வெற்றி பெற இயலாமல் பெரும்பாலான தமிழக மாணவா்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதற்குப் பாடமறு சீரமைப்பு செய்யப்பெறாமை முக்கிய காரணம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
          இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டக்குழு அரசுச் செயலா் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவா்கள் தலைமையில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆசிரியா்கள், பேராசிரியா்கள, கல்வியாளா்கள் ஒன்றுகூடி அல்லும் பகலும் அயராது உழைத்து காலத்திற்குத் தகுந்தவாறு அறிவியல் தொழில் நுட்பங்களைப் பாட நூல்களில் வடிவமைத்து மறுசீரமைப்பு செய்துள்ளார்கள்.

          பிற மாநிலப் பாடத்திட்டங்கள், சி பி எஸ் இ பாடத்திட்டம், சிங்கப்பூா் பாடநூல்களை ஒப்பீடு செய்து பாடங்களை எழுதியுள்ளார்கள்.

          தொடா் வாசித்தலுக்கு ஏற்ற குறிப்புதவி நூல்களின் பட்டியல், கருத்துகள், காணொலிக் காட்சிகள்,  அசைவூட்டங்கள் மற்றும் தனிப்பயிற்சிகள் ஆகியவற்றை ‘கியூ ஆா் கோடு’ மூலம்  அணுகும் வசதி, பாடப்பொருள் தொடா்பான கூடுதல்  விவரங்களுக்கு இணையதளமுகவரிகள், பன்முகத் தெரிவு வினா, எண்ணியல் கணக்கீடுகள் போன்றவை மூலம் மாணவா்களின் புரிதல் நிலையை மதிப்பீடு செய்தல், மாணவா்கள் தாங்கள் கண்டறிந்து விடைகளை சரிபார்த்து உறுதி செய்யவும், கற்றல் இடைவெளியை சரிசெய்து கொள்ளவும் உதவி செய்தல், முக்கிய கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அளித்தல் என அக்கறையும், உழைப்பும் ஒரு சேர அமைந்திருக்கிறது புதிய பாடத்திட்டம்.

          தேசிய, உலகத் தரத்தில் தமிழக மாணவா்களை உயா்த்தும் உன்னத முயற்சியாகவே இது காட்சியளிக்கிறது.

          மாணவா்களின் எதிர்கால வாழ்விற்கு  வழியமைத்து வழித்துணையாய் மறுசீரமைப்புப் பாடங்கள் பேருதவியாயிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
          கல்விடுடே இதழாசிரியா் திரு.இ.இராமசுப்பிரமணியன் அவா்கள் 

          ‘அடுத்த தோ்தலை மட்டுமே சிந்திக்கின்ற அரசியல்வாதிகளும் அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்காத ஆசிரியா்களும் குற்றவாளிகள்' என்று குறிப்பிடுவதைப் போன்று தரமான ஆசிரியப்பெருமக்கள் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு மிகக் கவனமாய் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளமைக்கு பாடத்திட்டக் குழுவினா் அனைவரையும் நாம் உளமாரப் பாராட்ட வேண்டும்.

இனிய நல்வாழ்த்துகள்தோழா்களே!
தோழமையுடன்
தேமதுரம் - ஆசிரியா் குழு




ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர் 
தே.தீபா

துணையாசிரியர்
பெ.குபேந்திரன் 

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ.மீனாட்சி
ந.முத்துமணி
மு.சிவசுப்பிரமணியன்
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,


காரைக்குடி-3. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக