சனி, 23 ஜூன், 2018

தமிழாயிரம்


தமிழாயிரம்
18. களப்பணி
1.         காக்கும் கடமைக் களப்பணி செய்வாரை
            ஊக்குதல் வேண்டும்  உரத்து.

2.         உரம்போ டுழவன் களைவெட்டிப் பின்னா்
            உரம் போட்டு நீர்விடுதல் காண்.

3.         கண்டால், களப்பணி செய்முறை கண்டறிவாய்
            செய்முறை தேர்வாய் சிறந்து.
           
4.         சிறந்தநிலை ஒன்றுண்டாம் சீர்த்த ஒருமைத்
            திறத்துடன் உன்னைக் கொடு

5.         கொடுத்துமைந்த தொண்டில் குறிநோக்கிச் செல்லல்
            எடுத்தமைந்த வெற்றி அது.

6.         அதுவுன் தனிப்பணி ஆகாமல் தக்க
            பொதுப்பணி ஆகிடப் போற்று.

7.         போற்றினால் ஊரெல்லாம் ஒன்றாகும்; ஒன்றாக
            ஏற்று விளக்கே என!

8.         ஏனற்குநீ ஈகன் எனத்திகழல் வேண்டும்;
            மனத்துறையும் மாட்சி புக.

9.         புகவேண்டும் போற்றுசீர்த் தொண்டில் புகழும்
            கருதாப் புகழைப் கருது.

10.       கருமமே கண்ணானார் கண்ட கடமைத்
            திருச்செல்வம் நீயே திடம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக