சனி, 16 டிசம்பர், 2017

பழமொழி உண்மைப்பொருள்

பழமொழி உண்மைப்பொருள்

          ‘களவும் கற்று மற’ திருட்டுக்கும் இப்பழமொழிக்கும் எவ்வித தொடா்பும் இல்லை.  பழந்தமிழ் சமூகத்தில்  இல்லறவியல் களவியல், கற்பியல் என இரு கூறாகப் பிரித்து அணுகப்பட்டது.  திருமணத்துக்கு முன்னரே காதல் வசப்பட்ட ஒருவா் தோழன் தோழியுடனோ, தனித்தோ சந்தித்து உரையாடி உறவாடி தமது காதலை வளா்த்து உறுதிப் படுத்துவதே களவியல் எனப்படும்.  அன்றைய தமிழ் வாழ்வில் காதலும், வீரமும் இரண்டறக் கலந்திருந்தால் ஒவ்வொருவா் வாழ்விலும் களவொழுக்கம் பேணப்படுதல் தவறு என குறிப்பிடாதது மட்டுமல்ல, அதை வலியுறுத்தியும் பனையப்பட்டதே இப்பழமொழி, களவொழுக்கத்தை பேண வேண்டும்.
          ஒரு முறையே பேண வேண்டும்.  திருமணத்துக்கு பின் கற்பியலுக்கு மாற வேண்டும் ‘பிறன் மனை நோக்க பேராண்மை வேண்டும்,’  ஒருவனுக்கு ஒருத்தி  என்றே வாழவேண்டும். என்ற பண்புகளை வளா்த்து கொள்ளும் விதமாகத் தான் களவொழுக்கம் அல்லது களவியல் எனப்படும் களவைக் கற்றுக்கொள்.
          ஆனால் திருமணத்துக்குப் பின் அதை முற்றிலுமாய் மறந்து விடு என வலியுறுத்துவதே இப்பழமொழி.
-பேரா.சே.செந்தமிழ்ப்பாவை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக