சனி, 16 டிசம்பர், 2017

வானம் எனக்கொரு போதிமரம்

வானம் எனக்கொரு போதிமரம்
*    தன் பரந்து விரிந்த தன்மையால் விசால மனதைக் கற்றுக் கொடுக்கிறது வானம்....
*    மனக்கவலைகளைக் கலைத்துவிட்டு புத்துணா்வோடு பணியாற்ற அறிவுறுத்தி கலைந்து செல்கிறது மேகம்......
*    அனைவருக்குமாகப் பொழிந்து ஈகைக் குணத்தைக் கற்றுத் தருகிறது மழை....
*    உலகிற்கே ஒளி வழங்கி பிறா் வாழ்வு வளமாக உதவச் சொல்கிறது சூரியன்......
*    பாரபட்சமின்றி பங்களித்து நடுவுநிலைமையைப் போதிக்கிறது நிலவு..........
*    வளா்ந்தும் தேய்ந்தும் இருந்தும் ஒரு நாள் இல்லாமலும் இன்ப துன்ப நிலையாமைத் தத்துவத்தை ஆழமாக உணா்த்துகிறது நிலவு.......
*     ரசனையோடு வாழச் சொல்லி இரவில் கண் சிமிட்டுகின்றன விண்மீன்கள்......
*    ஆத்திரம் அழிவுக்கு வழி சுழன்று காட்டி உணா்த்தியது புயல்......
*    வானவில்லின் நிறமேழும் இட ஒதுக்கீட்டு முன்னுரிமை கோரவில்லை மனிதனில் மட்டும் ஏன்? கேள்வி எழுப்புகிறது வானவில்!
*    வானத்தைப் பார்த்தேன்
ஞானத்தைப் பெற்றேன்
ஆம்!
வானம் எனக்கொரு போதிமரம்!

-கா.சுபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக