வியாழன், 12 அக்டோபர், 2017

அறம் சார்ந்த பண்பாடு

அறம் சார்ந்த பண்பாடு
இல்லறப் பண்பு
            அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் அமைவது இல்வாழ்க்கை.   திருமண வாழ்வை இல்லறம் என்றனர்கள் இல்லிருந்து அறம் பல புரிந்தும் இல்வாழ்வின் முடிந்த பயனாக அறத்தைப் போற்றியும் வாழ்ந்தார்கள்.  அக வாழ்க்கையில் தலைவன், தலைவி இருவரும் அன்பு உடையோராகவும், அறம் புரிவோராகவும் விளங்கினார்கள் இதனை தொல்காப்பியா்
                        “காமஞ் சான்ற கடைக்கோட் காலை
                    ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
                    அறம்புரி கற்றமொடு கிழவனும் கிழத்தியும்
                    சிறந்தது பயிற்றல் இறந்த தன் பயணே (தொல்கற்பியல்5)
என்று  தொல்காப்ய நூறு்பா உணா்த்தும் மனம் ஒத்த அன்பே இல்வாழ்க்கையில் தலையாய பண்பு என்று கருதினார்கள்.  தலைவனும் தலைவியும் உடலும் உயிரும் போல இயைந்த அன்புடன் விளங்கிய திறக்தினை
                        “யாக்கைக்கு உயிரியைந் தன்ன நட்பின்
                    வாழ்தல் அன்ன காதல்
                    சாதல் அன்ன பரிவறி யோளே” (அகம்.339:12-14)
என்று அகநானூறு காட்டுகின்றது.
ஆடவா் மகளிர் அறம்
            மனையறம் புரிதலை மகளிரும் வினையறம் புரிதலை ஆடவரும் மேற்கொண்டதால் இல்லறம் சிறந்து விளங்கியது.  கணவனும், மனைவியும் இணைந்து முறைப்படி நடத்தும் இல்லறச் சிறப்பினை
            “மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு
          மருவி னினியவு முளவோ” (குறுந்.322: 5-6)
என்று குறுந்தொகை கூறுகின்றது.
ஈகை
          அறம் என்பதற்கு ஈகை என்று பொருள் கொள்ளுமாறு ஈகையறத்தினைச் சங்க இலக்கியம் போற்றியுரைக்கின்றது.  ஔவையாரும் ஈதல் அறம் எனக் கூறுகின்றார்  தனிமனித வாழ்வில் இரத்தல் இழிவாகக் கருதப்பெறினும் சமூக வாழ்வில் ‘ஈகை’ உயா்ந்த அறமாகக் கருதப் பெறுகின்றது.  இதனை,
                        “செல்வத்துள் பயனே ஈதல்
                    துய்ப்பே மெனினே தப்புற பலவே” (புறம்.198:7-8)
ஒருவருடைய துன்பத்திற்கு அவர் வேண்டுவன அளித்து உதவுதலே ஈகையாகும்.  எவ்விதப் பயனும் கருதாது ஒருவா்க்கு ஒரு பொருளை அளித்தலே ஈகை எனப்படும் இதனை
                        “ஆற்றுத லென்பதொன் நலந்தவா்க் குதவுதல்”
 என்று கலித் தொகை கூறுகின்றது.
பகுத்துண்ணல்
            பாரோர் போற்றும் சிறந்த அறங்களுள் ஒன்று பகுத்துண்ணல்.  அற நூலார் தொகுத்துரைந்த அறங்களுள் தலைமை சான்றதும் அதுவே, இதனையே வள்ளுவம்
                        “பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
                    தொகுந்த வற்று ளெல்லாம் தலை” (குறள்: 332)
என்று எடுத்துரைக்கின்றது.  பகுத்துண்டு வாழும் பண்பினால் தன்னலம் அழிக்கின்றது.  பொதுநலம் வளா்கின்றது.  சமுதாயம் உயா்வடைகின்றது.  சமுதாயத்தை உயா்த்துதல் என்பது அறத்தின் நோக்கங்களுள் ஒன்றாகும்.  இதுவே பண்பாட்டின் வளா்ச்சியாகும்.

கு.கங்காதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக