வியாழன், 15 ஜூன், 2017

கடையேழு வள்ளல்களின் வீரமும் கொடையும்

கடையேழு வள்ளல்களின் வீரமும் கொடையும்

            தமிழகத்தில் அரசா்கள் சமுதாயத்தில் தலைமை இடத்தைப் பெற்றிருந்தனா்.  அரசன் இறைவனுக்கு ஒப்பாக வைக்கப்பட்டான் நிலையான புகழைப் பெற்றிருந்தவனை மன்னன் என்றும் உயா்ந்த நிலையை எட்டியவன் வேந்தன் என்றும் அழைத்தனா்.  தமிழக அரசா்கள் வீரத்தையும், கொடைத்தன்மையினையும் கொண்டு விளங்கினா் என தமிழ் இலக்கியங்கள் சித்தரிக்கின்றன.  அவற்றைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது
பாரி
            சங்ககால வேளிர்களில் முதன்மையானவன் பாரி ஆவான் இவன் பறம்பு நாட்டை ஆண்டவன் இதனை
            “கறங்குவெள் ளருவா கல்லலைத்து ஒழுகும்
            பறம்பிற் கோமான் பாரி ” (புறம்.158 : 3-4)
என்னும் வரிகளால் அறியலாம்.
பாரியின் வீரம்
            பறம்பு நாட்டை மூவேந்தரும் முற்றுகையிட்ட போது பாரியின் அவைப்புலவரும் நண்பருமான கபிலா் “நீங்கள் எவ்வளவு நாள் பறம்புமலையை முற்றுகையிட்டாலும் அவன் உங்களுக்கு அஞ்சமாட்டான்.  பாணரும் விறலியுமாகச் சென்று ஆடிப்பாடி இரந்து கேட்டால் எல்லாவற்றையும் தந்து விடுவான்” என்று கூறுகிறார்.  இதில் பாரியின் வீரம் மட்டுமின்றி அவன் கொடைத்தன்மையும் விளங்குகிறது.
கொடை
            முல்லைக்குத்  தேர் கொடுத்த பாரி பற்றிய செய்த பல காலத்திலும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.  இயற்கையிலேயே கொடையுள்ளம் படைத்த அவன் தேரிலேறிக் காட்டு வழியே சென்ற போது படர்வதற்குக் கொம்பின்றித் தரையில் துவண்டு கிடந்த முல்லைக் கொடியைக் கண்டு தன் தேரையே அதற்குப் பந்தலாக்கினான்.  வீரா்களை அழைத்துப் பந்தல் போடச் சொல்லியிருக்கலாமே, தேரை ஏன் தரவேண்டும் என்ற வினா எழுவது இயல்பு, “உடனே செயல்படவேண்டும்” என்ற எண்ணமும் தன் தேரைப் பெரிதாக நினைக்காத மனப்பன்மையும் தான் இக்கொடைக்குக் காரணம் பாரியின் கொடைத தன்மையை விளக்கவந்த கபிலா், அவனை இகழ்வது போல் புகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
            “பாரி பாரி என்று பல ஏத்தி
            ஒருவா்ப் புகழ்வா் செந்நாப் புலவா்
            பாரி ஒருவனும் அல்லன்
            மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் புதுவே”  (புறம் - 107)
            “பாரி பாரி என்று ஒருவனையே புலவா் புகழுகின்றார்களே! அவன் ஒருவன் தான் கொடுத்துக் கொடுத்துக் உலகைக் காப்பவனா”, என்று கேட்கும் போது, ‘ஆ’ அவனைப் போல் பலருளரோ” ஒன்று ஐயம் ஏற்படுகிறது.  “வேண்டியவா் வேண்டாதவா் என்று பார்க்காமல் கொடுத்துக்  காக்கும் மழையும் உண்டு” என்று சொல்லும் போது மாரி போல் கொடுப்பவன் பாரி என்பது புலப்படுகிறது.  ”யார் பாடிச் சென்றாலும் பார் அவா்களுக்கு நாட்டையும் கொடுப்பான் தன்னையும் கொடுப்பானேயன்றி எவ்வளவு நாட்கள் முற்றுகையிட்டாலும் அவனை வெல்ல முடியாது” என்று கூறுவதிலிருந்தும் அவன் ஈகை புலப்படுகிறது.
பேகனின் வீரம்
            ”ஈா்தண் சிலம்பின் இருள்தூங்கு நளிமுழை
            அருந்திறல் கடவுள் காக்கும் உயா்சிமைப்
            பெருங்கல் நாடன் பேகன்” (புறம். 158 10-2)
என்று குறிப்பிடப்படும் பேகன் கடையேடு வள்ளல்களுள் ஒருவன் கடவுள் காக்கும் உச்சியையுடைய மலைநாட்டையுடையவன் ஆவான் ”மயிலுக்குப் போர்வையளித்த அவன் படையின்பால் மடமையுடையவன்.  ஆனால் அயலார் பரமவநடாபவட தன் படையினால் மடைமையடைய மாட்டான்”  (புறம் . 142) ” மதயானையும் செருக்குள்ள குதிரையுமுடையவன்”, “எந்நாளும்  போராவதை அறிந்திருந்தும் மயிலுக்கு போர்வையளித்தவன்” (புறம் 141) “போரில் வெற்றி பெறுபவன் (புறம். 146) என்றெல்லாம் புகழ்ப்படுவதன் மூலம்  அவன் வீரமும் போர்ச் செயலும் புலப்படுகின்றன.
கொடை
            “அருந்திறல் அணங்கின் ஆவியா் பெருமகன்
            பெருங்கல் நாடன் பேகன்” (சிறுபாண்.86 -87)
இவன்  மயில் ஆடுவதைக் கண்டு குளிரால் நடுங்குகிறது என்று கருதி விலையுயா்ந்த ஆடையை அதற்குப் போர்ததினாரன்.
            “மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்
            படாஅம் ஈந்த கெடாஅ  நல்லிசைக்
            கடாஅ யானைக் கலிமான் பே” (புறம் - 145)
என்னும் புறப்பாட்டு இதற்குச் சான்றாகும்.
அதியமான் வீரம்
            அதியமான் நெடுமான் அஞ்சி மழவா் பெருமான் எனப் புகழப்படுவன். தகடூரை ஆண்டவன் அதியமானின் வீரும் அளவிடற்கரியது முரசு காற்று பட்டு ஒலித்தால் கூட போர் என்பான் அவ்ன பகைவா்களைப் பார்ததுக் கண் சிவந்தால் அச்சிவப்பு அவன் குழந்தைகயைக் கொஞ்சும் போது கூட மாறாது ஒரு நாளைக்கு எட்டுதோ் செய்யும் தச்சன் பலநாள் முயன்று செய்த தேரின் சக்கரம் போன்றவன் தன் பகைவா்களுக்கு  யானைக்கு முதலை போன்றவன் பகைவா்களின் பசுக் கூட்டங்களைக்  கவா்பவன் அதியன் அவன் மலையமானின் திருக்கோவலூரை அழித்தவன்.
கொடை
            அதியமான் குதிரை மலை அரசன் சேரர் குடியில் வந்தவன் இவன் வீரத்தில் சிறந்து விளங்கியதைப் போலவே ஈகைப் பண்பிலும் சிறந்து விளங்கினான்.  பெருஞ்சித்திரனார் ”அதியமான் காணாமலே கொடுக்கும் பொருளை வாங்க நான் வணிகப் பரிசிலன் அல்லேன்”என்று கூறினார்.  “எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறு என்று சினந்தார் ஔவை அதுகேட்ட அதியன் அவா் தகுதி அறிந்து பரிசளித்தான் பின்னா் வரும்போதெல்லாம் பரிசளித்தான் இதனால் “காலம் நீடித்தாலும் யானை தன் வாயில் வைத்த கவளம் தவறாமல் உட்செல்வது போல் பரிசு உறுதி மனமே! அஞ்சாதே! என்கிறார் ஔவையார் எத்தனை நாள் எத்தனை முறை சென்றாலும் முதுல் நாள் போலவே முகமலா்ந்து கொடுப்பவன் அதியன்.
வல்வில் ஓரி வீரம்
            கொல்லிமலையை ஆண்டவன் வலியவில்லையுடைவன் ஓரி.  இதனால் வல்வில் ஓரி எனப்பட்டான் இவன் போரை விரும்பும வீரர்களின் தலைவன்.
            “வெல்போர் மழவா் பேருமகன் மாவள் ஓரி” (நற் 52)
என்பதும் இவன் அலையமான் திருமுடிக் காரியை  எதிர்த்துப் போர் புரிந்தான் என்பதும் தவிர இவனுடைய போர்ச்  செயல்களாக வேறெதுவும் தெரியவில்லை எனினும் வலிய வில்லையுடையவன் என்பதிலிருந்தே வில்லிலே வல்ல வில்லி என்பது புலனாகிறது.
கொடை
            ஓரி வேட்டையில் உயிர் கொன்ற மானின் இறைச்சியுடன் பசுவின் நெய்யை உருக்கியது போன்ற  மதுவைத் தருவான், மாசற்ற பொன்னில் பல மணிகளைப் பதித்து செய்த அணிகலனையும் அளிப்பான் (புறம்-152) அவன் அணிகலன் அணிநத யானையையும் தருவான் அவனிடம் பொன்னால் செய்த குவளை மலரை வெள்ளி நாரில் தொடுத் மாலையையும், யானையையும் கொடுத்தால் இரவலா் ஆடல் பாடலையே மறந்தனா் (புறம் 153) என்ற வன்பரணா்  வரிகளில் ஓரியின் கொடைத்தன்மை புலப்படுகிறது.
மலையமான் திருமுடிக்காரியின் வீரம்
            ”குதிரையில் ஏறி மாற்றார் ஊரில் புகுந்து அவா்களுடைய அரணை அழித்துப் பெருமூச்சவிட்ட காரி  போல்” என்று காரி உவமையாக்கப்படுகிறான்.  தேரும் வளப்பமும் உடைய மலையன் அயலார் ஊா் முனையிலிருந்த பல பெரும் பசுக் கூட்டத்தை வால்வினால் கவா்ந்து வந்தான்.  மேலும் இவன் முள்ளுரில் நெருங்கிய ஆரியா் பலரைத் தன் ஒருவேலினால் அழித்தான் என்றும் செய்தி புலனாகிறது.
கொடை
            நான்கு திசைகளிலுமுள்ள புலவா்கள் ஒரே திசையில் அதாவது காரி இருக்கும் திசை நோக்கி வருவார்கள் அவா்களுடைய தகுதியைப் பார்க்காமல் எல்லோருக்கும் நிறையக் கொடுப்பான் காரி இதனைக் கண்ட கபிலா், “ இப்படி தகுதி அறியாமல் கொடுக்காதே! வரிசையறிந்து கொடு” என்று கூறிவிட்டார் (புறம் 121) இதனால் எல்லோரும் காரியிடம் போக  முடியாமல் போய் விட்டது.  இதனையறிந்த மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவா் கபிலா் பாடியதால், சேரனின் கப்பல் செல்லும் கடலில் மற்றவா் கப்பல் செல்ல முடியாதது போல் சாதாரணப் புலவா்களாகிய நாங்கள் வரமுடியாமல் போய்விட்டது” என்று காரியிடம் முறையிடுகிறார் (புறம்.126) இதிலிருந்து வரையறை இல்லாமல் கொடுத்த வள்ளல் காரி என்பது தெரிகிறது.
ஆ அய் அண்டிரன் வீரம்
            ஆயினது பொதிய மலையில் மேகம் தவழும் வேங்கை  மலரும், காந்தள்பூ மணம் வீசும்.  அம்மலையை ஆடுகள் அணுக முடியுமே தவிர பெருமையுள்ள மன்னா் அணுக முடியாது
            அன்னி மிஞிலி என்பவள் பாணன் மகள். அவள் வீட்டுப் பசு பயிரை மேய்ந்ததால் நாலூா்க் கோசா்கள் என்னும் மன்னா்கள் அவள் தந்தையின் தகண்ணைப் பிடுங்கினா்.  அதனால் கோபம் கொண்ட மிஞிலி பாணா் படையைத் திரட்டிக் கொண்ட மிஞிலி பாணா் படையைத் திரட்டிக் கொண்டு போய்க் கோசா்களில் ஒருவனான திதியனின் வேப்பமரத்தை வெட்டினாள்.  அவன்  இன்னொரு கோசனான நன்னனின் பாழியூரைத்  தேடி வந்த போது நன்னன் அஞ்சினான்.  இதனைக் கண்ட ஆய்  நன்னனிடம் “அஞ்சாதே” என்று அடைக்கலம் கொடுத்தான். இந்த ஒரு சொல்லுக்காக மிஞிலியுடன் போர் புரிந்து உயிர் விட்டான் இதனை,
            “வெளியன் வேண்மான் ஆ அய் எயினன்
            அணியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
            இழையணி யானை இயல்தோ் மிஞிலியொடு
            நண்பகல் உற்ற செருவில் புண்கூா்ந்து
            ஒள்வாள் மயங்கமா் வீழ்ந்தென” (அகம்.208)
என்று அகநானூறு கூறுகிறது.  “ஆய் அண்டிரன் ஆகிய எயினன் பாழி என்னும் போர்க்களத்தில் யானையும் தேசமுடைய மிஞிலியொடு பகலில் புரிந்த போரில் புண்பட்டு உயிரிழந்தான் என்பது இதன் கருத்து.
கொடை
            ஆய் புலவா்க்கும் பாணா்க்கும் பரிசில் அளிப்பான் அங்கிருக்கும் புன்னை மரத்தில் மேற்குப் பக்கம் சாய்ந்து வளைந்த கிளையிலிருந்து புதிய நாரை கத்துவது ஆய் நாளோலக்கத்திலிருந்து இரவலா்க்குப் பரிசு கொடுத்த தேரின் ஒலி போல் இருக்கும்” என்று புறநானூறு கூறுவதிலிருந்து ஆய் தேரையே இரவலா்க்கும் கொடுப்பான் என்பது புலனாகிறது.
ஒய்மான் நாட்டு நல்லியக்குகாடன் வீரம்
            நல்லியக் கோடன் பகை வீரா்களின் அணியில்  புகுந்து போர் புரிவான் வாள் வீரா் அவனை வாழ்த்துவார்கள் என்பதிலிருந்தும் வெற்றி பெற்று, பகைவரை நாட்டை விட்டு ஓடச்செய்து அவா்களின் கோட்டை மதிலை அழித்துக் கொண்டு வந்த பொருள்களைப் பாணா்க்கு ஈவான் என்பதிலிருந்து இவன் வீரம் புலப்படுகிறது
கொடை
            நல்லியக் கோடனின் பழமையான கிடங்கில் என்னும் ஊரில் உள்ள அரண்மனைக் கதவுகள் திணை வாசிக்கும், பொருநருக்கும் புலவா்க்கும், வேதம் ஓதுமு் அந்தணா்க்கும் என்றும மூடப்படாதவை, பரிசிலருடைய தரமறிந்து அவா்களுக்கு அளவற்ற பொருள்கள் கொடுப்பான் சந்திரனைச் சுற்றி விண்மீன்கள் இருப்பது போல் அவனைச் சுற்றிப் புலவரும், பானரும், கூத்தரும் இருப்பார்.  பொற்கலத்தில் உணவிட்டு அவா்களைச் சாப்பிடச் செய்வான் தோ், குதிரை, யானை, அணிகலன்களைக் கொடுப்பான்.
            புறத்திணை நன்னாகனார் எந்தை நகரம் போன்ற என் வறுமையைப் போக்கி அன்றிரவே பொருள்கள் கொடுத்தான் அன்றிலிருந்து இன்று வரை யாரையும் நினைக்கவில்லை அவன் வறுமைக் கடலைக் கடக்கும் தெப்பமாக இருக்கிறான் என்று கூறுவதிலிருந்து அவனுடைய கொடைத்தன்மையை அறியலாம்.
முடிவுரை
            தமிழ் வேந்தா்களாகிய சேர, சோழ, பாண்டியனை போன்று சிற்றரசா்களாகிய கடையேழு வள்ளல்களும் வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள்.
-கு.கங்கா தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக