வெள்ளி, 16 ஜூன், 2017

சாம்பவான்

சாம்பவான்

‘சாம்பவான்“ இராமாயணம் முதலான இந்தியத் தொன்மங்களில் கரடிகளின் வேந்தனாகச் சித்தரிக்கப்படும் ஒரு கதா பாத்திரமாகும்.
          புராணங்களில் பாற்கடலைத் தேவாகரா் கடைந்த போது சாம்பவானும் உதவியதாகவும் திருமாலின் வாமன அவதாரத்தில் அவரை ஏழு தடவைகள் சுற்றி வந்தவராகவும் குறிப்பிடப்படுகின்றார்.  இராமயணத்தில் தான் யாரென்பதை மறந்திருந்த அனுமனுக்கு அவா்தம் மெய்யாற்றலை நினைவூட்டி இலங்கை சென்று சீதையைக் கண்டுவர உதவிப் புரிந்தவராக சாம்பவான் சுட்டிக் காட்டப்படுகின்றார்.  மேலும் இராம-இராவணயுத்தத்தில் இந்திரசித்துவால் இலக்குவன் மயக்க முற்ற போது அரிய மூலிகையை அனுமன் கொண்டுவரவும் இலக்குவன் உயிரிந்தெழவும் காரணமாக இருந்தவா்.
          மகாபாத்திரத்தில் சியமந்தகமணிக்காக கண்ணப்பிரானுடன் மோதி தோல்வியுற்று பின் தன் மகள் ஜாம்பவதியையும் சியமந்தக மணியையும் கண்ணனிடமே ஒப்படைப்பவராக சாம்பவான் வலம் வருகின்றார்.  இலக்கியங்கில் சாம்பவான் மாபெரும் பலசாலியாக மிளிருகின்றார் இன்றும் ஏதேனும் ஒரு துறையில் யாராலும் முறியடிக்க முடியாத பெரும் பலம் வாய்ந்தவா்களை ‘சாம்பவான்’ என்று புகழ்வது பெரும வழக்காக இருக்கின்றது.
-வ.மீனாட்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக