வெள்ளி, 16 ஜூன், 2017

உயிரில் கலந்திருக்கும் இறைவன்

உயிரில் கலந்திருக்கும் இறைவன்

ஆனா அன்னையின் அன்பில்....
ஆவன்னா ஆசிரியரின் போதனையில்....
ஈனா இயற்கையின் அழகில்....
ஈயன்னா ஈகையின் சிறப்பில்...
ஊனா உண்மையின் உயா்வில்...
ஊவன்னா ஊக்கம் தரும் சொல்லில்...
ஏன்னா எண்ணத்தின் தூய்மையில்...
ஏயன்னா ஏற்றமிகு கொள்கையில்...
ஐயன்னா ஐயம் தீா்க்கும் கல்வியில்...
ஒனா ஒற்றுமையின்  பெருமையில்...
ஓவன்னா ஓங்கார ஓசையில்...
ஓளவன்னா ஔவை சொன்ன பாடலில்
என அனைத்திலும் அனைத்துமாகி கண்கூடாக காணக் கற்றுக்கொள்வோம்.

-பெ.குபேந்திரன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக