திங்கள், 15 மே, 2017

சீவகசிந்தாமணியில் மகளிர் மேற்கொண்ட துறவு

சீவகசிந்தாமணியில் மகளிர் மேற்கொண்ட துறவு
முன்னுரை
            சீவகசிந்தாமணி கதைத் தலைவன் பெயராலேயே அமைக்கப்பட்ட ஒரு காப்பியமாகும்.  இது விருத்தம் என்னும் பாவினால் எழுந்த முதற்காப்பியம்.  இந்நூல் பதின்மூன்று இலம்பகங்களையும், மூவாயிரத்திற்கும்  மேற்பட்ட செய்யுட்களையும் கொண்டு அமைந்துள்ளது.  இது கதை முழுதும் இன்பச் சுவையைத் தழுவிய காப்பியமாகவும், பிற்பகுதியிலுள்ள முக்தி இலம்பகம் மட்டும் வீடுபேறு அடைவதற்குரிய வழியைக் கற்பிக்கின்றது.  இதில் பெண்கள் மேற்கொண்ட துறவு வாழ்க்கையைப் பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சமணா்கள்
            சமணா் என்பதற்கு துறவிகள்  என்பது பொருளாகும் இந்தியாவில் தோன்றிய சமயங்களுள் ஒன்றான சமண சமயம் கி.மு.6-ம் நூற்றாண்டில்  தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இது கொல்லாமை, தூய்மை போன்ற நல்லறங்களினால் இறைவனை அடையமுடியும் என அறிவுறுத்துகின்றது.  சமண சமயக் கடவுளான அருகனை வணங்குவோர்  “ஆருகதா்” என்றும், அவா்களது சமயம் “ஆருகத மதம்” ஆகும்.  சமணக் கடவுள் பற்றற்றவா்.  எனவே “நிர்க்கந்தா்” அல்லது “நிகண்டா்” எனப்பட்டார்.  அது பற்றிச் சமண சமயம் நிகண்ட மதம் எனப் பெயா் பெற்றது.  மதங்கள் சமணம் ஒழிந்த ஏனைய  மதங்கள் “ஏகந்தவாத மதங்கள்” எனவும், சமணம் “அநேகாந்தவாதம்” எனவும் கூறப்படுகிறது.
சமண சமயப் பிரிவுகள்
            சமண சமயம் மூன்று பெரும் பிரிவுகளை உடையது.  ஒன்று சவேதாம்பரம் இதற்கு வெண்மை என்பத பொருளாகும்.  எனவே இப்பிரிவினா் வெண்மை நிற உடையணிந்து தெய்வத்திற்கும் வெண்ணிற ஆடை அணிவிப்பா்.  துணையின்றி சீவகனைப் பெற்றெடுத்த இடுகாட்டில், செண்பகமாலை என்னும் தோழி உருவத்தில் வந்து உதவிய தெய்வத்திற்கு இடுகாட்டில் ஒரு கோயிலை எழுப்பினாள்.  பிறகு தான் எப்பொழுதும் காணும் மயிற்பொறியின் வடிவத்தைத் தன் மாடத்தில் ஓவியமாக வரையச் செய்தாள் பின் சீவகன் பிறந்த இடுகாட்டை அறச்சாலையாக்கினாள்.
            ”சிங்கம் நடப்பதுபோற் சோ்ந்து பூத்தூய்ப்பலா் வாழ்த்தத்
            தங்கா விரும்பிற்றம் பெருமான் பாதம் முடிதீட்டி
            எங்கோ பணியென்னா அஞ்சா நடுங்கா இருவிற்கட்
            பொங்க விடுதவிசில் இடுந்தான் போரே றணையானே” (சீவ.சிந்.2608)

அப்பொழுது தன்னை வந்து பணிந்து வணங்கிய சுனந்தை மற்றும் சீவகன் என் மனைவியரை வீழ்த்திவிட்டு, சீவகனை அழைத்து, அவனது தந்தையான சச்சந்தன் கட்டியங்காரனது சூழ்ச்சியால் கொல்லப்பட்டதையும், சீவகனை ஆளில்லாத இடுகாட்டில் பெற்றெடுத்த அவல நிலையையும் எடுத்துக் கூறினாள்.  பின் உனது தந்தையைப் போல் உலக இன்பங்களில் கவனத்தைச் செலுத்தாதும், தீய பழக்கங்களை விட்டொழித்தும், கடந்து போனவற்றை எண்ணி வருந்தாது, இனி நிகழப் போகும் காலங்களில் தவத்தினை மேற்கொண்டு பிறவித் துன்பததை நீக்கியும், பயனற்ற பொருட்கள் மீது செலுத்தும் கவனத்தை விடுத்தும், வீடுபேற்றினை அடைய தானமும், தவமும் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகின்றமையை,
            “உடற்றும் பிணித்தீ யுடம்பினுயிர் பெய்திட்டு
            அடுத்துணா்வு நெய்யாக ஆற்றல்துவை யாகக்
            குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே
            கொடுத்துண்மின் கண்டீா் குணம்புரிமின் கண்டீா்”  (சீவ.சிந்.2620)
என்னும் பாடல் வரிகளைக் கொண்டு விசயையின் வாயிலாய் திருத்தக்கத்தேவா் தவத்தின் வலிமையையும், பயனையும் மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.  இவ்வாறாக விசயை தவத்தின் சிறப்பினைக் கூறி தான் துறவு மேற்கொள்ள விரும்புவதை எடுத்துக் கூறுகின்றார் (சீவ.சிந்.2600-2626)
சுநந்தையின் துறவு
            சீவனிகன் தாயான விசயையின் துறவை எண்ணி வருந்திய சீவகனுக்கு, அவனது வளா்ப்புத் தாயான சுநந்தையின் துறவு மேற்கொள்ள விரும்பும் மனநிலையானது மேலும் துன்பத்தை அளித்தது, சுநந்தை சீவகனிடம், “உன் தாய் துறவு மேற்கொண்ட நிலையில், நான் இங்கு இன்புற்றிருத்தல் சிறப்புடையதன்று. எனவே நானும் விசயையின் துறவு நிலையைப் பின்பற்றி நல்லறம் அடைய விரும்புகிறேன்.  உன்னை இடுகாட்டில் விசயை பெற்றெடுத்த நிலையினை, உன் மனைவியருக்கும் வரவிடாமல் தடுப்பாயாக” என்று கூறிவிட்டு தவப்பள்ளியை நோக்கி நடந்தாள். (சீவ.சிந்.2627, 2628, 2645, 2647) இதனை,
            “என்றலுஞ் சுநந்தை சொல்லும் இறைவிதான் கண்டதையா
            நன்று மஃதாக அன்றே ஆயினுமாக யானும்
            ஒன்றுனன் துறப்பல் என்ன ஒள்ளெரி தவழ்ந்த வெண்ணெய்க்
            குன்றுபோல் யாதுமின் றிக்குழைத்து மெய்மறந்து நின்றான்” (சீவ.சிந்.2627)
என்னும் பாடல் வரிகளால் அறியலாம்.
பம்பை அருளிய அறிவுபதேசம்
            துறவு மேற்கொள்ள விரும்பிய விசயையடம் பம்பை, மிகக்கடுமையான விரதங்கள், பொய்கூறாமை, தூய்மையாக இருத்தல் போன்றவற்றைப் பின்பற்றுவதும் துறவறம் மேற்கொள்வதுன்பதும் இயலாதவொன்றாகும். எனவே உன் எண்ணத்தை மாற்றிக்கொள் என்று கூறினாள்.   மேலும் பம்பை கூறியதை மறுத்து, துறவு மேற்கொள்ள விரும்பிய விசயையிடம், காமன் வேதநூல் கூறிய முறைப்படி தவமகளிரின் பாதங்களைக் கழுவி நூலால் நெய்யப்பட்ட புதிய ஆடைகளைக் கண்களைக் கட்டுவது போல் தங்கள் இன்ப மூட்டும் மார்பின் மேல் கட்டுக என்று கூறினாள். (சீவ.சிந்.2632)
தேவியா்க்கு சீவகன் கூறிய அறிவுபதேசம்
            தவம், உலகம் இரண்டினையும் எடை போட்டால், உலகமானது தவத்திற்கு கடுகளவு கூட ஒப்பிட்டு அமையாது எனவே இவ்வுண்மையினை உணா்ந்து உலக ஆசையினை விடுத்து தவநெறியில் நின்று வாழ்ந்தால் திருமகளானவள் அவா்களுடன் இருப்பாள். அவ்வாறில்லாது உலக ஆசையினில் மனதை செலுத்தினால் திருமகள் தங்காது நீங்கிவிடுவாள், எனவே துறவை விரும்பி அருகனது திருவடி பணிக என்று தேவிமார்களிடம் சீவகன் எடுத்துரைக்கின்றான்.
            மேலும் பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தி காத்து வருகிறவன் உயா் குலத்தினருக்குத தலைவனாகவும், துவரது உலகில் பிறந்து தன் எழுபிறப்பு மற்றும் தீவினைச் செயல்களை வென்று வீடுபேற்றினை அடைவான்.  மாறாக பிற உயிர்களைத்  துன்புறுத்துபவா்கள் நகரத்தில் வீழ்ந்து வெந்து மடிவா்.  அருகப் பெருமானது பெருமைகளை அறிந்தவரின் சிந்தனையானது பிறரின் செல்வத்தைப் பெற விரும்பாது என்று சீவகன் வாயிலாக திருத்தக்கத்தேவா் துறவு மேற்கொள்வோரின் பண்புகளாக எடுத்துரைக்கின்றார். (சீவ.சிந்.3105-3110)
தேவிமார்கள் துறவு நெறியைக் கடைப்பிடித்தல்
            சீவகன் கூறியதைக் கேட்ட தேவிமார்கள், அவன் வீடுபேற்றை அடைந்த பிறகு, அசோகமரத்தின் கீழ் வீற்றிருக்கும் அருகப் பெருமானது பாதம் வணங்கி, நிலையாமை தானம், தவத்தின் அருமையினை உணா்ந்து, மிகப்பெரிய மலையினைத் தூக்குவது போன்று பெண்பிறப்பானது கெடும்படியுமாகவும் கடுந்தவத்தினை மேற்கொண்டனா்.
            தவத்தின் வலிமையால் தேவியா் பெண்பிறப்பினை வேரறுத்து தேவலோக இந்திரா்களாய் ஞானத்தினைப் பெற்று சுவா்க்கத்தினை அடைந்தனா்.  அவா்களைத் தேவலோக மகளிர் தழுவ இன்பமடைந்தனரென திருத்தக்கத்தேவா் தேவலோகத்தில் இன்பம் மட்டுமே நிகழ்வதினை எடுத்துரைக்கின்றார்.  இதனை, (சீவ.சிந்.3119 - 3122)
            ”ஆசை ஆா்வமோ டையம் இன்றியும்
            ------------------------------------------------
            ஏசு பெண்ணொழித் திந்திரா் களாய்த்
            தூய ஞானமாய்த் துறக்கம்  எய்தினார்” (சீவ.சிந்.3121)
என்னும் பாடல் வரிகளால் அறியலாம்.
முடிவுரை
            இவ்வாறாக விசயை, சுநந்தை மற்றும் தேவிமார் எண்மா் ஆகியோர் துறவு மேற்கொள்ளும் முறைமையினை எடுத்துரைத்து துறவு மேற்கொள்ளும் முறைமையினை  எடுத்துரைத்து உலக இன்பத்தினை விரும்பி மேற்கொள்வதால் ஏற்படும் துன்பங்களையும், துறவினை மேற்கொள்வதால் மக்கள் பெறும் நன்மைகளையும், மக்கள் அறிந்து துன்ப வாழ்வினை விடுத்து இன்ப வாழ்வினை வாழ வேண்டுமென விரும்பும் திருத்தக்கத்தேவரின் மனநிலையினையும், ஆண்பிறப்பிற்கு மட்டுமே வீடுபேறு உண்டு, பெண் பிறப்பினருக்கு இல்லை எனவும் எடுத்துரைத்திருப்பது அக்காலக் கட்டத்திலும் பெண்கள் இழிபிறப்பினராகக் கருதப்பட்டமையை அறியமுடிகிறது.  பெண்கள் கடுந்தவம் மேற்கொண்டாலும் தேவலோகத்தில் ஆண்களாக பிறந்து வீடுபேற்றினை அடைந்தனா் என்று திருத்தக்கத்தேவா் உரைத்திருப்பது அக்கருத்திற்கு அரண் சேர்ப்பதாய் அமைவதினை இக்கட்டுரையின் வாயிலாய் அறியமுடிகிறது.
-தே.தீபா
           




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக