திங்கள், 15 மே, 2017

விவசாயி


விவசாயி
இவன்
இந்நாட்டின் முதுகெலும்பு
ஆம் ...........
இந்நாட்டின் முதுகெலும்புதான்!
கடனை உடனை வாங்கி
கண்டவா்கள் காலில் விழுந்து
கடனிலே வாழ்ந்து
கடனிலே வீழ்வதால்
கவலைக் கிடமாகிறது!
உழவா்கள்
உழைத்து உழைத்து
வோ்வையைச் சிந்துகிறாய்
அரசியல்  தலைவா்களோ
உம் வோ்வை நிலங்களை
விலைநிலங்களாகி விட்டார்கள்!
பார்த்து பார்த்து
பச்சைப் பயிர்கள்
பாதி வழியல்
பட்டுப் போகும் போது
இவனது இன்பம்
இடம் மாறிப் போகிறது!
உழவா்கள்
பயிர்களை விளைவிப்பதால்
நாம் சாப்பிடுகிறோம்
ஆனால்
விவசாயியோ சாப்பிடுவதற்கு
விளை நிலங்களை விற்கும்
அவலம் தொடா்கிறது!
மழைநீா்
மழைநீர்
காண்மாய் நீர்
ஆற்று நீா்
வறண்டு விட்டாலும்
கண்ணீர்விட்டுப்
பயிர் வளா்ப்பான்
கவலையோடு
உயிர் விடுகிறான்!
விவசாயத்தை
காப்பதற்குப்  போராடுகிறான்
போராட்டங்கள் அனைத்தும்
வேடிக்கையாக மாறியது
வேதனையைத் தருகிறது!

-க.கலைச்செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக