வியாழன், 30 ஆகஸ்ட், 2018

ஓலைக்குடிசை


ஓலைக்குடிசை
ஓலைக் குடிசை
உள்ளே சாரல் சத்தம்
பாத்திரம் வைத்து
சங்கீதம் கற்றுக்
கொண்டான்......

சுவற்றின் இடுக்கில் புறாக்களின்  இரகசிய
பாஷை    .........நாளை
வேறிடம்
பார்க்கலாம்

அடுப்படிக்குள்
அழகான பூனை
ஐந்து குட்டிகளுடன்.

கோணித்திரைக்குப்
பின்னால் யுவதியின்
அவஸ்தை முனகல்கள்

தலைவனின்
கவிதை முடிவுற்றது.
எதிர்கால இந்நாட்டு
மன்னனே..உன்னை
வரவேற்கிறேன்..
-அ.ரா.பாணுப்பிரியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக