வியாழன், 30 ஆகஸ்ட், 2018

சிறுவா் பாடல் விடுதலை நாள் விழா


சிறுவா் பாடல்
விடுதலை நாள் விழா
இயற்கை வளமிகு தேசமாக
நம் இந்திய தேசம் திகழ்ந்ததுவே..
பேராசை கொண்ட ஆங்கிலேயா்
நம் நாட்டை அடிமைப்படுத்தினரே..

சுதந்திரம் எனது பிறப்புரிமை
என்றே மக்கள் திரண்டனரே..
மக்கள் தம்மை வழி நடத்த
தலைவா் பலரும் முயன்றனரே..

அகிம்சை வழியில் காந்தியும்
ஆயுதம் ஏந்தி நேதாஜியும்
பாட்டுது் திறத்தால் பாரதியும்
விடுதலைப் போரில் குதித்தனரு..


கொடியைக் காத்திட்ட குமரனும்
செக்கிழுத்த செம்மல் வ.வு.சி.யும்
திறைகட்ட மறுத்த கட்டபொம்மனும்
சிவகங்கையை மீட்ட வேலுநாச்சியாரும்

இன்றும் இன்னும் பல்லாயிரம்போ்
நாட்டை மீட்கத் திரண்டரே..
விடுதலை ஒன்றே குறிக்கோளாய்
மக்கள் கூட்டம் ஒன்றிணைய
அதனைக் கண்ட ஆங்கிலேயா்
அஞ்சி அஞ்சி நடுங்கினரே…
நாட்டை மீண்டும் தந்தனரே..

அந்நாளே இந்நாளாம்
வீடுதலை நாள் எனும்
பொன்னாளாம்!

வீரா் பலரின் உயிர்த் தியாகத்தினாலே
கிடைத்தது இந்த சுதந்திரமே..
தாய்த்திருநாட்டைக் காத்திடவே
விடுதலை நாளாம் இந்நாளில்
ஒன்றுபடுவோம்! உறுதியேற்போம்!
வாருங்கள் வாருங்கள்
தோழா்களே!
-கா.சுபா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக