வியாழன், 26 ஜூலை, 2018

கடவுள் தந்த பரிசு வாழ்க்கை


கடவுள் தந்த பரிசு வாழ்க்கை


பிறரிடம் ஒரு கடும் சொல்லைக் சொல்லும்முன் வாய் பேச முடியாதவா்களை நினைத்துப் பாருங்கள்.
          உங்கள் சாப்பாட்டைக் குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவா்களை நினைத்துப் பாருங்கள்.

          உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கைத் துணை வேண்டி வருந்துபவா்களை நினைத்து பாருங்கள்.

          உங்கள் குழந்தைகளைக் குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவா்களை நினைத்துப் பாருங்கள்.

          உங்கள் வீட்டைக் குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவா்களை எண்ணிப் பாருங்கள்

          உங்கள் வேலையைச்  குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவா்களை எண்ணிப் பாருங்கள்.

          சோகத்தில் உங்கள் முகம் வாடும் பொழுது கடவுள் தந்த வாழ்க்கை என்ற பரிசுக்கு நன்றி கூறி முகத்தில் புன்னை தவழ விடுங்கள்.
தே.தீபா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக