திங்கள், 21 மே, 2018

தமிழாயிரம்


தமிழாயிரம்

17.நிலப் பறிப்பு

1.       ஓா்ந்தால் தமிழம் உருவாகும் அன்னதில்
          சோ்ந்ததால் அடையோம் சுடா்.

2.       சுடர்எழும்பும் நேரம் சுறுசுறுப்பு வேண்டும்
          அடா்ந்தெழுந் தொன்றல் அரண்.

3.       அரணில்லை  ஆராரும் வந்து பரணேறி
          நின்றார் பறித்தார் நிலம்.

4.       நிலமெல்லாம் தம்மதாய் நீளத் குறித்தார்
          குலமெல்லாம் கூட்டினார் கொண்டு

5.       கொண்டழித்த ஆழிக் கொடுமைக்கும் முலாகக்
          கண்டழித்தும் காத்தல் இலம்.

6.       இல்லாதோம் இல்லை;  இருந்தவை எல்லாமும்
          பொல்லார்வாய்ப் போட்டோம் புகுந்து.

7.       புகுந்த பகையைப் பொருந்தும் உறவாய்
          மிகுந்தார் தமிழா் மிக.

8.       மிகமுற்று புற்றுநோய் மேற்பூச்சால் போமோ,
          அகத்தறுத் தாற்றலே தீா்வு.

9.       தீா்வும் எளிதன்றாம் தீராத  உட்பகையைத்
          தீர்த்தலே தீா்க்கும் திறம்.

10.     திறமான ஈகத் திருக்கொடையா் கொண்ட
          மறமானக் காப்பேயாம் காப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக