வியாழன், 21 செப்டம்பர், 2017

பழமொழியின் உண்மை பொருள்

பழமொழியின் உண்மை பொருள்

          அரசனை நம்பிப் புருசனைக்  கைவிட்ட கதை என்றொரு பழமொழி உள்ளது. பெண்ணின் ஒழுக்க நெறிக்கும் இப்பழமொழிக்கும் தொடா்பு ஏதும் இல்லை.  இதனுடைய உண்மைப்பொருள் அரச மரத்தைச் சுற்றிவந்தால் கரு உருவாகும் என்பதாகும். இந்நம்பிக்கையின் அடிப்படையில் பெண்கள் தம் கணவரைத் தம்மருகே ஆண்டவிடாது அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தனா்.  அவா்களைக் கேலிச் செய்து அரச மரமும் வேண்டும் அதே சமயம் புருசனும் வேண்டும்  வெறும் அரசமரத்தை மட்டும் சுற்றி வந்தால் கருத்தோன்றாது என்பதை விளக்குவதற்காகவே இப்பழமொழி வழங்கப்பட்டது.  இதில் அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும்.
          அரசமரம் பிராணவாயுவை அதிகளவு வெளியிடக்கூடியது அதிகாலையில் அரசமரத்தைச் சுற்றும் பொழுது சுவாசிக்கும் பிராணவாயு கருப்பையை விரிவடையச்செய்யும் இது கருத்தோன்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் நம் முன்னோர்கள் அரசமரத்தைச் சுற்றிவரக் கூறினா்.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக