வியாழன், 21 செப்டம்பர், 2017

தமிழாயிரம்

தமிழாயிரம்
தமிழனாய் நில்

1.   குறிக்கோளால் ஒன்றிய கொள்கைதான் ஒன்றே
      நெறியாம் தமிழினக் கோள்.
2.   கேளாகக் கொண்டுள்ள கொள்ளைநோய் ஆரியத்தைச்
      சூழாமல் சுட்டு புதை.
3.   புதைக்கவே உள்ளஓா் ஆங்கிலனாய் வாழ்தல்
      அதைநீ விடுத்துத் தொலை.
4.   தொலைக்கவே நிற்கின்ற தொல்லையில் தொல்லைத்
      திரவிடத்தைச் சுட்டுப் பொசுக்கு.
5.   பொசுக்கும் வெயிற்குப் பொசிகின்ற நீராம்
      பசுமைத் தமிழனாகப் பார்.
6.   பார்ப்பாய் தமிழனாய்! பாய்வாய் தமிழனாய்;
      நீர்வாய்ப் பயிராக நில்!
7.   நிற்பாய் தமிழனாய்! நீள்வாய் தமிழனாய்!
      பொற்பார்ந்த வீறுடன் போ!
8.   போனால் வடக்கென்ன, பொக்காலப் போயொழியும்!
      பேன்தான் பெருமாளே? பேசு.
9.   பேசினால் போதும் பெருக்கெடுக்கும் வெள்ளமாய்
      வீசினால் போதும் துணி!
10. துணிவுனக்குச் சொத்தாகும்  தூக்கத்தை விட்டுத்
      துணிந்தால் எழும்புமுன் வீறு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக