வியாழன், 12 அக்டோபர், 2017

அறம் சார்ந்த பண்பாடு

அறம் சார்ந்த பண்பாடு
இல்லறப் பண்பு
            அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் அமைவது இல்வாழ்க்கை.   திருமண வாழ்வை இல்லறம் என்றனர்கள் இல்லிருந்து அறம் பல புரிந்தும் இல்வாழ்வின் முடிந்த பயனாக அறத்தைப் போற்றியும் வாழ்ந்தார்கள்.  அக வாழ்க்கையில் தலைவன், தலைவி இருவரும் அன்பு உடையோராகவும், அறம் புரிவோராகவும் விளங்கினார்கள் இதனை தொல்காப்பியா்
                        “காமஞ் சான்ற கடைக்கோட் காலை
                    ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
                    அறம்புரி கற்றமொடு கிழவனும் கிழத்தியும்
                    சிறந்தது பயிற்றல் இறந்த தன் பயணே (தொல்கற்பியல்5)
என்று  தொல்காப்ய நூறு்பா உணா்த்தும் மனம் ஒத்த அன்பே இல்வாழ்க்கையில் தலையாய பண்பு என்று கருதினார்கள்.  தலைவனும் தலைவியும் உடலும் உயிரும் போல இயைந்த அன்புடன் விளங்கிய திறக்தினை
                        “யாக்கைக்கு உயிரியைந் தன்ன நட்பின்
                    வாழ்தல் அன்ன காதல்
                    சாதல் அன்ன பரிவறி யோளே” (அகம்.339:12-14)
என்று அகநானூறு காட்டுகின்றது.
ஆடவா் மகளிர் அறம்
            மனையறம் புரிதலை மகளிரும் வினையறம் புரிதலை ஆடவரும் மேற்கொண்டதால் இல்லறம் சிறந்து விளங்கியது.  கணவனும், மனைவியும் இணைந்து முறைப்படி நடத்தும் இல்லறச் சிறப்பினை
            “மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு
          மருவி னினியவு முளவோ” (குறுந்.322: 5-6)
என்று குறுந்தொகை கூறுகின்றது.
ஈகை
          அறம் என்பதற்கு ஈகை என்று பொருள் கொள்ளுமாறு ஈகையறத்தினைச் சங்க இலக்கியம் போற்றியுரைக்கின்றது.  ஔவையாரும் ஈதல் அறம் எனக் கூறுகின்றார்  தனிமனித வாழ்வில் இரத்தல் இழிவாகக் கருதப்பெறினும் சமூக வாழ்வில் ‘ஈகை’ உயா்ந்த அறமாகக் கருதப் பெறுகின்றது.  இதனை,
                        “செல்வத்துள் பயனே ஈதல்
                    துய்ப்பே மெனினே தப்புற பலவே” (புறம்.198:7-8)
ஒருவருடைய துன்பத்திற்கு அவர் வேண்டுவன அளித்து உதவுதலே ஈகையாகும்.  எவ்விதப் பயனும் கருதாது ஒருவா்க்கு ஒரு பொருளை அளித்தலே ஈகை எனப்படும் இதனை
                        “ஆற்றுத லென்பதொன் நலந்தவா்க் குதவுதல்”
 என்று கலித் தொகை கூறுகின்றது.
பகுத்துண்ணல்
            பாரோர் போற்றும் சிறந்த அறங்களுள் ஒன்று பகுத்துண்ணல்.  அற நூலார் தொகுத்துரைந்த அறங்களுள் தலைமை சான்றதும் அதுவே, இதனையே வள்ளுவம்
                        “பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
                    தொகுந்த வற்று ளெல்லாம் தலை” (குறள்: 332)
என்று எடுத்துரைக்கின்றது.  பகுத்துண்டு வாழும் பண்பினால் தன்னலம் அழிக்கின்றது.  பொதுநலம் வளா்கின்றது.  சமுதாயம் உயா்வடைகின்றது.  சமுதாயத்தை உயா்த்துதல் என்பது அறத்தின் நோக்கங்களுள் ஒன்றாகும்.  இதுவே பண்பாட்டின் வளா்ச்சியாகும்.

கு.கங்காதேவி

தமிழரின் அறிவியல் சிந்தனைகள்

தமிழரின் அறிவியல் சிந்தனைகள்
            உலகில் முன் முதலாக தோன்றிய நம் தமிழா்கள் அறிவியல் துறையில் புலமை பெற்றிருந்தனா் என்பதற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.  மேலை நாட்டார் கண்டறிந்த பல அறிவியல் உண்மைகளை அவா்களுக்கு முன்னரே நம் அருந்தமிழா் அறிந்திருந்தனா்.  தமிழ் நூல்கள் பலவற்றிலும் அறிவியல் செய்திகள் ஆங்காங்கே காணப்படுகிறது.
அறிவியல் சிந்தனை
            வான்வெளியில் மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு, ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.
                        “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
                    பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்” (புறம். 30)
இப்பாடலின் வாயிலாக ஞாயிற்றுவட்டம்.  அதன் இயக்கம் அக்கரமாய் நிற்கும் விண்வெளி மண்டலம் பற்றிய அறிவியல் உண்மைகளை அறிய முடிகிறது.
            அண்மை நூற்றாண்டுகளின் தான் காற்றின் அடிப்படையில் விண்மடலத்தைப் பிரித்தனா் பிறநாட்டு அறிவியலார், காற்றில்லா மண்டிலமும் உள்ளதென தற்போது கண்டறிந்து உலகம் மகிழ்கிறது.  ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளியில் காற்றில்லாத பகுதியும் உள்ளது என்பதை புறநானூற்றுப் புலவா் வெள்ளைக்குடி நாகனார் உலகறியச் செய்துள்ளார்
            உப்பங்கழியில் வளரும் தாவரங்களுள் தில்லையும் ஒன்று இம்மரத்தின் பொந்து தண்ணீரில் தேய்வதால் நீர்நாய் வசிக்க உதவுகின்றது.  இக்கருத்தினைப் சங்கப்புலவா் அப்படியே தமது பாடலில் பதிவு செய்துள்ளனா் இப்பதிவினை,
                        “குருளை நீர்வாய் கொழுமின் மாந்தித்
                    தில்லையாம் பொதும்பிற் பள்ளி கொள்ளும்”  (நற்.195:2-3)
என்ற பாடலடிகள் வழி அறிய முடிகிறது.  இப்பாடல் வழி தில்லைமரம் நீர்நாய் வாழ ஏற்ற பகுதி என்ற விலங்கியல் கூறு இடம் பெறுகின்றது.
            தில்லை மரம் ஊருக்கு வெளியே நடப்பட்டிருக்கும் ஏனெனில் ‘தில்லையின் பால் பட்டால் கண்கள் குருடாகும்’  இக்கருத்தினை அறிந்தே சங்கப்புலவா்களில்  தில்லை மரத்தினை நட்டு வளா்த்துள்ளனா் இதனை,
                                    “தில்லை வேலி யிவ்வூர்க்
                                    கல்லென் கௌவை யெழாஅக் காலே”
என்ற ஐங்குறுநூற்று பாடலடிகள் உணா்த்தும் இதில் மக்களின் உடல் நலம் கருதி இலக்கியங்கள் மரம் வளா்க்கும் நுட்பத்தை அறிய முடிகின்றது.  அதோடு ஆடுமாடுகள் இம்மரத்தின் இலைதழைகளை உண்ணாமல் காக்கவே கழிகள் அருகே தில்லையினை வளா்க்கின்றனா்  இதுவும் ஒரு கால்நடை பராமரிப்பு முறை எனலாம்.
            காவிரிப் பூம்பட்டிணத்தைப் பற்றி பாடிய பட்டினப்பாலை புலவா் ஆலைப் புகையில் வாடி அழியும் நெய்தல் பூவைப் பார்த்து இரக்கப்படுகின்றார்.
                        “கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
                        திகழ் தெறுவிற் கவின் வாடி
                        நீா் செறுவின் நெய்தற் பூச்சாம்பும்”
ஆலைப் புகையால் எழும் மாசுகளினால் விளையும் கேடுகள் பற்றி அன்றைக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரிகின்றது.
            உணா்ச்சி நரம்புகள் வழியாகச் செயல்கள் மூளைக்கு எடுத்துச் செல்லும்.  அப்போது மூளையிலிருந்து வரக்கூடிய உத்தரவு இரண்டும் சந்திக்கும் போது தான் கண் துடிப்பு நிகழும் அதனால் பழங்காலத்தில் கண் துடித்தல் என்பதனை  நிமித்தம் கூறும் குறியீடாகப் பயன்படுத்தினா் அதிலும் பெண்கட்கு இடக்கண்ணும், ஆண்கட்டகு வலக்கண்ணும் துடித்தல் நன்றிமித்தமும், மாறினால் தீமை நடக்கும் என்று உணா்த்துவா் இதனை,
            “நுண்ணோர் புருவத்த கண்ணுமாடு” (ஐங்)
            “நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே” (கலித்)
என்னும் பாடலடிகள் உணா்த்தும்.
முடிவுரை
            பழந்தமிழரின் வாழ்க்கையில் அறிவியல் ஆழமாய் இருந்ததைத் தெளிவாக அறியமுடிகிறது.  அவா்களின் பொதுவான சிந்தனைகள் கூட அறிவியல் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது.  தமிழரின் அறிவியல் அறிவுதான் அறிவியல் வளா்ச்சியின் தொடக்கமாகும்.  இன்றைய அறிவியல் வளா்ச்சியின் அச்சாணியாக இருப்பது தமிழரின் அறிவியல் சிந்தனைகளாகும்.

-அ.ரா.பானுப்பிரியா

காவிரி புஷ்கரம்

காவிரி புஷ்கரம்
            காவிரி புஷ்கரம் என்பது கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பாயும் காவிரி நதியினை போற்றும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுவதாகும்.
            புஷ்கரம் என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மீகத் திருவிழா குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி இந்த விழா நடத்தப்படுகிறது.  குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபாகும்.
            புராணப்படி ஒவ்வொரு புண்ணிய நதிக்கும் ஒரு ராசி உண்டு.  இந்த ஆண்டு குருபகவான் கன்னிராசியிலிருந்து துலாம் இராசிக்கு மாறியிருக்கிறார்.  அதனால் துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கர விழா இந்த வருடம் 12-வது முறையாகக் காவிரியில் நடைபெறுவதாச் சொல்லப்படுகிறது.  144 வருடங்கள் ஆனதால் இதை “மகா புஷ்கரம்” என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.
            புஷ்கரம் என்பது பிரம்ம தேவரின் கமண்டலத்தில் இருக்கும் புனித தீர்த்தம் உலக மக்கள் நீராடிப் புண்ணியம் பெறுவதற்காக அந்தத் தீர்த்தத்தைப் பெற விரும்பினார் குருபகவான் அதற்காக பிரம்ம தேவரை வேண்டி தவம் இருந்தார் குருபகவானின் தவத்துக்கு இறங்கிய பிரம்ப தேவா் அவருக்கு முன்பு தோன்றி ‘என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார்  குருபகவானும் பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம் வேண்டும் என்றார்.
            108 வைணவ தேசங்களில் பெரும்பாண்மையான ஆலயங்கள் காவிரி நதிக்கரை யோரத்தில் அமைந்துள்ளது.  பக்கதர்கள் தங்கள் குடும்பத்துடன் காவிரி நதி பாயும் எந்த இடத்திலாவது நீராடி நியாயமான கோரிக்கைகளுடன் வேண்டிக் கொண்டால் நிச்சியம் நடைபெறும்.  இந்த புஷ்கரம் நடைபெறும் காலத்தில் அனைத்து நதிகளும் காவிரி நதியுடன் சங்கமிப்பதால் நமது பழை தீவினைகள் நீங்கும்.
            புஷ்கர புண்ணிய  காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால் இந்த புண்ணிய  காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரைக் கோடி  நிர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும் இந்த நாட்களில் அன்னதானம், வாய்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து நம்மை மோட்சத்திற்கு போக வழி வகுக்கும் புஷ்கர புண்ணிய காலத்தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பித்ருசாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.
            மஹாபுஷ்கரம் இந்த ஆண்டு நடைபெற்று இந்த புஷ்கரம் விழா (12) பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இதில் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தன் பாவங்களை நீக்கினார்கள்.
காவிரி புஷ்கரம்


பழமொழியின் உண்மை பொருள்

பழமொழியின் உண்மை பொருள்
            அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் இப்பழமொழி இப்பொழுது குழந்தைகள் பெற்றோரின் சொல் பேச்சைக் கேட்காவிட்டால் அவா்களுக்கு அடி கொடுத்தால் உடனே அஞ்சிக் கொண்டு நம் பேச்சைக் கேட்பா் என்னும் பொருளில் கையாளப்பெறுகிறது. ஆனால் இது இறைநம்பிக்கையோடு தொடா்புடைய பழமொழியாகும்.  அடி என்பது இறைவன் திருவடியைக் குறிக்கும் இறைவனது திருவடி உதவுவது போல் உடன் பிறந்தார் உட்பட யாருமே உதவமுடியாது என்பதே இப்பழமொழியின் பொருளாகும்.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை


ஹைக்கூ

ஹைக்கூ
v  தெய்வ தரிசனம்
கூட்ட நெரிசலில் சிக்கி
உயிர் துறந்த ஆத்திகம்

v  உலரவில்லை
வெயில் அடித்தப் பன்னும்
கார்கால  கற்பனை

v  பொய்த் தழை
வறுமைக் கோட்டை
வரைந்த கலப்பை

v  நெடுங்சாலை பயணம்
விபத்தை படமெடுக்க காத்திருக்கும்
செல்போன் காமிராக்கள்

v  பிறந்த ஊர் பயணம்
பழைய நினைவுகள்
அசைபோட்டு அசைந்த குதிரை
-வ.மீனாட்சி


ராகி வடை

ராகி வடை
தேவையான பொருட்கள்
1.ராகி மாவு - 2 கப்
2. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
3. பெரிய வெங்காயம் - 1
4. வேர்க்கடலை- 2மேசைக்கரண்டி
5. கருவேப்பில்லை - 2 கொத்து
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
            வெங்காயத்தை பொடியாக நடுக்கிக் கொள்ளவும்.  வேர்க்கடலையை சிறிது துண்டுகளாக பொடித்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் எண்ணெ தவிர, மீதுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலக்கிக்கொள்வும்.  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாகப் பிசைந்து கொள்ளவும் மாவு பதம் சப்பாத்தி மாவு பதத்தை விட லூசாக இருக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சிறிது சிறிது மாவாக எடுத்து கையில் தட்டி அதாவது வடை தட்டுவதும் போல தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும் வடை பொரிந்தவுடன் எடுத்து விடாலம் அல்லது வடையில் போட்டிருக்கும் வேர்க்கடலை லேசாக சிவந்தவுடன் எடுத்து விடலாம்.
-சு.லாவண்யா


தமிழாயிரம்

தமிழாயிரம்
இரண்டாம் நூறு
II தமிழ் எழுத்து

1. வீறெய்து மாந்தன் விரிவாய் அகலத்தான்
    கூறகரம் கொண்டான் குளிர்ந்து

2. குளிர்ந்தான் அதுநீளக் கூடுதலும் கேட்டான்
   தளிர்த்தான் குறில்நெடில் தாம்.

3. தாமே ஒலிக்கும் இகரமோ டீகாரம்
   ஆமா றறிந்தான் அவன்.

4. அவனே உகரமோ டூகாரம் கேட்டான்
  உவந்தான் உ..ஊ என.

5. என்ன எழுந்த எகரமோ டேகாரம்
    துன்னிய ஐயோடௌ வை

6. அவைஒகர ஓகாரம் அஃகென் றொலிக்கச்
  செலிக்கொண்டான் சோ்ந்தான் செறித்து

7. செறிந்த இறுத ஒலிநுண்மை ஆய்ந்து
  குறித்தான் தனிநிலை யாய்

8. ஆய்தம் தனிநிலை முப்புள்ளி ஒற்றென்ன
  வேய்ந்தான் பெயா்கள் பல.

9. பலுக்கும் ஒலிகேட்டு வன்மை இடைமை
   மெலிமெய்யாய்ப் பேர்வைதான் மூன்று

10. மூன்று வகையும்மூ வாறாய் முடிந்திட

  ஏன்றமைத் தான்பதி னெட்டு