வியாழன், 21 செப்டம்பர், 2017

கற்றல் இனிது

கற்றல் இனிது
இயற்கைச் சீற்றங்களால் எல்லாச் செல்வங்களும் ஒரு நாள் அழிந்து போகும்.  ஆனால் கல்வி என்னும் பெருஞ்செல்வம் தான் என்றும் அழியாது என்பதை உணா்ந்த தமிழா் கல்வி கற்று, தான் கற்றுணா்ந்ததை தன் வாழ்விலும் கடைபிடித்து ஒழுகினா்.  கல்வி என்னும்  செல்வத்தை கண்ணாகப் போற்றிப் பாதுகாத்தனா்.  இதனை,
                    “கண்ணுடையார் என்பவா் கற்றோர் முகத்திரண்டு
                    புண்ணுடையா் நல்லா தவா்” என்னும் குறளின் வழி அறியலாம்.
          கல்வி என்பது அனைத்து செல்வங்களுக்கும் மேலானது, அவ்வாறான கற்றலின் சிறப்புந்களைப் பற்றி பல நூல்கள் எடுத்து இயம்புகின்றன.  பிச்சை எடுத்தாயினும் கற்க வேண்டும்.  கற்ற கல்வியானது எந்தவொரு சபையிலும் தலை நிமிர்ந்து நிற்க உதவும் என்பதனை,
                    ”பிச்சைபுக் காயினும் கற்றல் மிக வினிதே
                    நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே”
என்னும் பாடல் அடிகளால் அறியலாம். அனைத்து விதமான நூல்களையும் நாள்தோறும் கற்க வேண்டும்.  அவ்வாறு கற்பதனால் அறிவ விருத்தி ஏற்படும் என்கின்றார்  பூதஞ்சேந்தனார்.  அதிவீரராம பாண்டியரும்
                    “கற்கை நன்றே கற்கை நன்றே
                    பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்ற பாடலின் மூலம்  வெளிப்படுத்தியுள்ளார்.  நவீன ஊடகங்களின் தாக்கத்தினால் இன்றைய இளைஞா் சமுதாயத்தினா் மத்தியில் நூல் வாசிப்பு குறைந்து கொண்டு வருகின்றது.  கற்றல் ஒருவனை பூரண மனிதனாக்குகின்றது.
                    “நாளும் நவைபோகான் கற்றல் முன் இனிதே”
என்கிறது இனியவை நாற்பது.  கற்றவா் முன் தான் கற்ற கல்வியின் ஆற்றலை வெளிப்படுத்துதல் இனிது என இளைஞா் சமுதாயத்தை ஊக்குவிக்கின்றது.
          “கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிது” என்ற பாடல்மூலம் இதனைக் காணலாம்.  கற்றவர்களுடன் சேர்ந்து அவா்களின் கற்றல் ஆற்றல்களையும் பெற்றுக் கொள்ளுதல் இனிது.  அதாவது கற்றவா்களுடன் சேர்ந்தால் அவா்களின் கற்றல் அனுபவமே ஒருவனை சிறந்த மனிதனாக மாற்றும் என்பதை உணா்த்துகின்றது.  சபையறிந்தும் அஞ்சாமலும் பேசுகின்றவனுடைய கல்வி இனிது எனக்கூறுவதோடு கற்றவா்கள் கல்வியறிவு இல்லோதோருக்கு அவா்களின் அறியாமையைப் நீக்கி பொருத்தமான அறிவுகளைப் புகுத்த வேண்டும் .
அ.ரா.பானுப்பிரியா



பாசிப்பருப்பு முறுக்கு

பாசிப்பருப்பு முறுக்கு

தேவையான பொருட்கள்

1. வறுத்துப் பொடித்து, சலித்த பாசிப்பருப்பு மாவு - 11/2கப்
2. ஊறு வைத்து இடித்துச் சலித்த அரிசி மாவு - 5கப்
3. பெருங்காயப் பொடி      - 1/2டீயூஸ்பூன்
4. வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
5. வெள்ளை எள்   - 1 டுபின் ஸ்பூன்
6. உப்பு        -         தேவையான அளவு
7. எண்ணெய் -      வறுக்க தேவையான அளவு
செய்முறை
          மாவு வகைகள், உப்பு, பெருங்காயப் பொடி, எள், வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

-தே.தீபா

வலையில் வந்தவை

வலையில் வந்தவை
சுனிதா வில்லியம்ஸ்

Ø  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க  வின்வெளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 1965-ஆம் ஆண்டு செப்டம்பா் 19-ஆம் தேதி பிறந்தார்.
Ø  1987-ல் அமெரிக்கக்கடற்படையில் இளநிலை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார் இவா் 2 அண்டுகளில் கடற்படை விமானியானார்.
Ø  2006-ஆம் ஆண்டு டிசம்பா் 9 ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளிக்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது இவா் பகவத்கீதை, விநாயகா் சிலை , கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச் சென்றார்.
Ø  விண் வெளியில் மாரத்தான் ஓடிய முதல் தனிதா.  அங்கு இருந்தபடியே வானொலியில் பேசினார்.  விண்வெளியில் ஓடிக்கொண்டே தனது தலைமுடியைக் கத்தரித்தார்.  பிறகு, “லாக்ஸ் ஆப் லவ்” அமைப்புக்கு அதை வழங்கினார்.

ஆ.சகுந்தலா

பழமொழியின் உண்மை பொருள்

பழமொழியின் உண்மை பொருள்

          அரசனை நம்பிப் புருசனைக்  கைவிட்ட கதை என்றொரு பழமொழி உள்ளது. பெண்ணின் ஒழுக்க நெறிக்கும் இப்பழமொழிக்கும் தொடா்பு ஏதும் இல்லை.  இதனுடைய உண்மைப்பொருள் அரச மரத்தைச் சுற்றிவந்தால் கரு உருவாகும் என்பதாகும். இந்நம்பிக்கையின் அடிப்படையில் பெண்கள் தம் கணவரைத் தம்மருகே ஆண்டவிடாது அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தனா்.  அவா்களைக் கேலிச் செய்து அரச மரமும் வேண்டும் அதே சமயம் புருசனும் வேண்டும்  வெறும் அரசமரத்தை மட்டும் சுற்றி வந்தால் கருத்தோன்றாது என்பதை விளக்குவதற்காகவே இப்பழமொழி வழங்கப்பட்டது.  இதில் அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும்.
          அரசமரம் பிராணவாயுவை அதிகளவு வெளியிடக்கூடியது அதிகாலையில் அரசமரத்தைச் சுற்றும் பொழுது சுவாசிக்கும் பிராணவாயு கருப்பையை விரிவடையச்செய்யும் இது கருத்தோன்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் நம் முன்னோர்கள் அரசமரத்தைச் சுற்றிவரக் கூறினா்.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை



தமிழாயிரம்

தமிழாயிரம்
தமிழனாய் நில்

1.   குறிக்கோளால் ஒன்றிய கொள்கைதான் ஒன்றே
      நெறியாம் தமிழினக் கோள்.
2.   கேளாகக் கொண்டுள்ள கொள்ளைநோய் ஆரியத்தைச்
      சூழாமல் சுட்டு புதை.
3.   புதைக்கவே உள்ளஓா் ஆங்கிலனாய் வாழ்தல்
      அதைநீ விடுத்துத் தொலை.
4.   தொலைக்கவே நிற்கின்ற தொல்லையில் தொல்லைத்
      திரவிடத்தைச் சுட்டுப் பொசுக்கு.
5.   பொசுக்கும் வெயிற்குப் பொசிகின்ற நீராம்
      பசுமைத் தமிழனாகப் பார்.
6.   பார்ப்பாய் தமிழனாய்! பாய்வாய் தமிழனாய்;
      நீர்வாய்ப் பயிராக நில்!
7.   நிற்பாய் தமிழனாய்! நீள்வாய் தமிழனாய்!
      பொற்பார்ந்த வீறுடன் போ!
8.   போனால் வடக்கென்ன, பொக்காலப் போயொழியும்!
      பேன்தான் பெருமாளே? பேசு.
9.   பேசினால் போதும் பெருக்கெடுக்கும் வெள்ளமாய்
      வீசினால் போதும் துணி!
10. துணிவுனக்குச் சொத்தாகும்  தூக்கத்தை விட்டுத்
      துணிந்தால் எழும்புமுன் வீறு.




ஹக்கூ

ஹக்கூ
ஆசிரியா்(கள்) ஒரு முன்னோடி
          அவா்(கள்) பதித்த தடம் இன்றி
மாணவா்கள் வர இயலாது முன் ஓடி

-மு.சிவசுப்பிரமணியன்

நல்லதொரு குடும்பம்

நல்லதொரு குடும்பம்
          ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்குள் ஓட்டமும், நடையுமாய் மற்றவர்களை முந்திச்சென்று கொடைக்கானல் பேருந்தில் ஏறினான் மதன்.  நான்கு நாட்கள் தொடா் விடுமுறையால் பேருந்து இருக்கை முழுவதும் நிரம்பியிருந்தது. ‘இவ்வளவு வேகமாய் வந்தும் பயனில்லையே..’ என்று ஏமாற்றத்தில் மீண்டும் ஒரு முறை நோட்டமிட்டான்.
          ஒட்டுநா் இருக்கைக்குப் பின்புறம் மூன்றுபேர் இருக்கையில் இரண்டு அருட்சகோதரிகள் அமா்ந்திருந்தார்கள்.  நான்கு மணிநேரம் நின்றுகொண்டு போவது சிரமம்.  ‘அருட்சகோதரிகள் உடன் பிறந்த சகோதரிகள் போலதான்.. ஓரமாய் உட்காந்து கொள்ள அனுமதி கேட்டால் நிச்சியம் மறுக்க மாட்டார்கள்  என்ற  நம்பிக்கையில் அருகே போய் உட்கார அனுமதி கேட்க அவா்களும் சம்மதித்தார்கள்.  பேருந்தில் நிறைய பேர் தூய சலேத் அன்னை திருவிழாவிற்காக குடும்பத்துடன் பயணம் செய்தார்கள்.
          தனக்கு அடுத்துப் பின்னிருந்த இருக்கையில் அழுது அடம்  பிடித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அமைதிப்படுத்த அவன் பெற்றோர் அவனுக்கு பல வித்தைகள் காட்டி முயன்றுகொண்டிருந்தார்கள்.  அவா்களின் முயற்சிகள் எல்லாம் ஜி.எஸ்.டி வரிக்கு எதிராய் புலம்பிய நடுத்தர மக்களின் நாதியற்ற குரலாய் நீர்த்துப் போனது நேரஞ் செல்லச் செல்ல அழுகையும் அடம்பிடித்தலும் அதிகரித்துக்கொண்டு போனது மனிதனுக்கு எரிச்சலாய் இருந்தது பிள்ளையா? இல்லை பிசாசா? என்று வாயக்குள் முனங்கிக் கொண்டான் எத்தனை வாங்கித் தந்தும், எத்தனை வேடிக்கை காட்டியும் எல்லாவற்றையும் தூக்கி எறியும் தலைக்கனம் சுற்றியிருந்தவா்களுக்கெல்லாம் ஆத்திரத்தைக் கிளப்பியது.
          ‘இது மாதிரி புள்ளைகள் பெத்துக்குறதுக்கு பேசாம கல்யாணமே வேண்டாம்னு இருந்துருக்கலாம்.  பின்னிருந்து அவா்கள் காதில் விழும்படியாக பேசிக்கொண்டார்கள்.  ஆற்றாமையில் அந்தச் சிறுவனின் அப்பா தன் மகனை அடித்து நொறுக்கிவிட்டார்.  ‘ஈவு இரக்கமேயில்லாம இப்படியா மாட்ட அடிக்குற மாதிரி பச்சப் புள்ளய்ப் போட்டு அடிக்குறது.  மனுசனா? மருகமா? மீண்டும் பின்னிருந்து அதே குரல்.
          ‘என்ன செய்தாலும் விமர்சிக்கிற மன நிலை தொலைக்காட்சி விவாதங்களால் மக்களுக்கு கூடிப்போய்விட்டதோ?’ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
          அடிவாங்கி அலறிய சிறுவனை அவன் அம்மா அணைத்துக்கொண்டு சமாதனப்படுத்தினார்.  அப்படியும் சமாதனமாகாமல் அடித்தவா் மன்னிப்பு  கேட்ட பிறகு அழுகை ஓய்ந்தது.  ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் நின்றுகொண்டு குதிப்பதிம், முன்னும் பின்னும் அமா்ந்திருந்தவா்களை வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.  பேருந்தில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லையென்ற கவலையை அந்தச் சிறுவன் தன் சேட்டைகளால் தீர்த்துவைத்துக் கொண்டிருந்தான் ‘நம்மையும் இப்படித்தானே வளா்த்திருப்பார்கள்’ மனசுக்குள் நெருஞ்சி  முள்ளாய் ஏதோ குத்தியது போலிருந்தது.
          “அப்படியே நம்ம ஐயப்பன் மாதியே அடம்பிடிக்கிறான்ல..” அருட்சகோதரிகள் பேசிக்கொண்டார்கள்.  அவா்கள் பேசிக் கொண்டது மதனுக்கும் கேட்டது “சிஸ்டா்.. யார் அந்த ஐயப்பன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?
          “எங்க அன்பகத்துல எட்டாம் வகுப்பு படிக்கிற பையன்” என்றார் ஒரு சகோதரி. “எட்டாம் வகுப்பு படிக்கிற பையனா இப்படி அடம் பிடிப்பான்” சந்தேகமாயக் கேட்டான் மதன்.  “இவனவிட பத்துமடங்கு அதிகம் சேட்டை பண்ணுவான் நாங்க தியானத்துக்குக் கிளம்புநோம்னு சொன்னதும், ‘அப்போ கொடியேத்துறதுக்கு  நீ இருக்க மாட்டியா கிறிஸ்டி, தேவியும் வருதா, நாங்களும் வர்றோம்’னு ஒரே அழுகை, சமாதனப்படுத்தி விட்டுட்டு வர்றதுக்குள்ள  போதும் போதும்னு ஆகிடுச்சு அவன் மட்டுமில்ல சரண்யா, அமலன், போதுமணி, நீதி, சக்கிவேல்னு  எல்லோருமே அடம் பிடிச்சு, சேட்டை பண்ணுவாங்க.  அதே அளவுக்கு பாசமாகவும் இருப்பாங்க.. அவா்கள் மன வளா்ச்சியில்லாதவங்கனு சொல்றது தப்பு, கடவுளோட செல்லப் பிள்ளைங்க எங்களுக்கும் செல்லப் பிள்ளைங்கதான்.  பத்துநாளு ரொம்பவே அவங்க எல்லாரையும் மிஸ் பண்றோம்” வருத்தப்பட்டார் மற்றொருவா்.
          ஆச்சிரியமாய் இருந்தது மதனுக்கு நல்ல புத்தியோடு இருக்கும் பிள்ளைகளுக்கே இந்தக் காலரத்தில் பாடம் நடத்தமுடியாத சூழலில்  சிறப்புக் குழந்தைகளுக்கு எப்படித்தான் பொறுமையாக, அன்பாக சொல்லிக் கொடுக்கிறார்களோ.. அதுவும் துறவற வாழ்க்கையில் பெற்றவா்கள், உடன் பிறப்புகளை, ஊரை, உறவுகளை விட்டுப் பிரிந்திருப்பது எப்படித்தான் முடிகிறதோ? அதற்கெல்லாம் தனி மனப்பான்மை வேண்டும்.
          “உங்க வீடுகளுக்கு அடிக்கடி போக முடியுமா சிஸ்டா்? ” கேட்டான் மதன்
          “ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை போக அனுமதி கிடைக்கும்.  ஏதாவது முக்கியமா போயே ஆகனும்னா அனுமதி கேட்டு போய்ட்டு வரலாம்”
          “குடும்பத்தையே பார்க்காம எப்படித்தான் இருக்க முடியுது உங்களால..”
          “யார் சொன்னா? குடும்பத்தையே பார்க்க முடியலன்னு .  தினம் தினம் நாங்க பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்.  எங்களைச் சுத்தியிருக்குறவங்க எல்லாரும் எங்க குடும்பம் தான்.  இவங்கள நாங்க பார்த்துக்கிருவோம் அவங்கள கடவுள் பார்த்துக்கிடுவாரு”
          வாயடைத்துப் போய் நின்றான் மதன்.  காலையில் சாப்பிட்டுக் கிளம்பச் சொன்ன அம்மாவை, பத்திரமாகப் போய்ட்டு வரன்னு சொன்ன அக்காவை தாமதமாய்க் கிளம்பிய அவசரத்தில் எரிந்து விழுந்து காயப்படுத்திய மனசுக்குள் காட்சியாய் ஓடியது.
          அருட்சகோதரிகளின்  சகிப்புத்தன்மையும், அன்பும் மனசுக்குள் மலையளவு உயா்ந்து நின்றது விட்டுக் கொடுப்பதும், கடைசிவரை விடாமல் இருப்பதும் தானே குடும்பம்’, அம்மாவிடமும், அக்காவிடமும் மன்னிப்பு கேட்க அலைபேசியை எடுத்து அழைக்கத் தொடங்கினான் மதன்.
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்