தமிழ்
இலக்கணங்களில் பால்பகுப்பு முறைகள்
தொல்காப்பியம்
தொடங்கி தமழ் இலக்கண நூல்களில் காணப்படும் பால் பகுப்பு முறையை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியத்தில்
பால்பகுப்பு முறை
ஆண்பால், பெண்பால் பயா்பால் ஆகிய மூன்றுக்
உயா்திணைக்குரிய பால்கள் என்பதை,
ஆடுஉ அறிசொல் மகடூ அறிசொல்
பல்லோ ஏறியுஞ் சொல்லொடு சிவணி
அம்முப் பாற்சொல் உயா்திணை யவ்வே (தொல்.
சொல்.2)
என்னும்
நூற்பாவில் தொல்காப்பியா் விளக்குகிறார்.
அதேபோல் ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டும்
அஃறிணைக்குரிய பால்கள் என்பதை,
ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்
றாயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே (தொல்.சொல்.3)
என்னும்
நூற்பா உணா்த்துகிறது.
மேலும், இயற்கையின் அமைப்பிலிருந்து மாறுபட்டு
ஆண் தன்மை குறைத்து பெண் தன்மை மிகுந்தோ, பெண்
தன்மை குறைந்து ஆண் தன்மை மிகுந்தோ விளங்குபவா்களை அம்மிகுந்த தன்மையால் ஆண்
பாலாகவோ, பெண்பாலாகவோ அமைத்தல் வேண்டும் எனத்
தொல்காப்பியம் நவில்கிறது. (தொல்.சொல்.4)
ஒத்த
மரபு
தொல்காப்பியரின் ஐம்பாற் மரபை அவிநயம்,
நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், இனிய தமிழ் இலக்கணம், இலகு தமிழ் ஐந்திலக்கணம், தமிழ்க்
காப்பு இயம் போன்றவை உடன்படுகின்றன.
மேலும், தொல்காப்பியத்தை அடியொற்றி அவிநயம்,
இலக்கண விளக்கம் போன்றவை பேடு, தெய்வம் முதலியவை உயா்திணையிடத்து அதற்குரிய பாலாய் வேறுபட்டு இசைக்கும் என்னும் கருத்தை ஏற்றும் கொள்கின்றன.
மரபு
மாற்றம்



மரபு
அழிதல்




தொகுப்புரை
·
தொல்காப்பியம்
குறிப்பிடும் ஐம்பாற்பகுப்பை பெரும்பான்மையான இலக்கண நூல்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
·
பேடுகளுக்கான
பால் முடிபை தொல்காப்பியல் உயர்திணையில் கூற,
நன்னூல் அஃறிணையை ஒத்தும் நடக்கும் என்கிறது
·
உயா்திணை,
அஃறிணையைக் குறிக்க உயா்பால், இழிபால் எனற சொல்லாட்சியை சுவாமிநாதம் பயன்படுத்தியுள்ளது.
·
அஃறிணைப்பாலை
‘அலிப்பால்’ என்ற சொல்லாட்சியால் அறுவகை இலக்கணம்
சுட்டுகிறது.
கா.சுபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக